பண்ணை விடுதிகளில் அவசர ரெய்டு!- சிபிஐயை முந்தும் ரகசியம் என்ன?

பண்ணை விடுதிகளில் அவசர ரெய்டு!- சிபிஐயை முந்தும் ரகசியம் என்ன?

கா.சு.வேலாயுதன்

பாலியல் வன்கொடுமை விவகாரங்கள் ஏற்படுத்திய அதிர்வுகளிலிருந்தே இன்னமும் மீளவில்லை பொள்ளாச்சி. அதற்குள், போதைப் பொருட்கள் சகிதம் பார்ட்டி கொண்டாட்டங்களுக்கு இடம் கொடுக்கும் தங்கும் விடுதிகள், அடுத்த அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கின்றன. பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையில் சிபிஐ தீவிரம் காட்டிவரும் சூழலில், விடுதிகள், ரிசார்ட்டுகள் ரெய்டு விஷயத்தில் உள்ளூர் போலீஸார் காட்டிவரும் அதீத சுறுசுறுப்பும் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.

பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு தலைமையிலான கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதுடன், மற்றவர்களும் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள். சமீபத்தில், மணிவண்ணன் எனும் இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான்  போதைப் பார்ட்டிகளுக்கு இடமளித்த விடுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.

கடந்த மே 3-ல், பொள்ளாச்சி அருகில் சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை விடுதியில் நள்ளிரவில் இளைஞர்கள் பாட்டும் கூத்துமாகக் கொட்டமடிப்பதாகப் புகார்கள் பறந்தன. போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்  கஞ்சா, அபின். கொக்கைன் போதையுடன் தள்ளாடிக்கொண்டிருந்தார்கள். அத்தனை பேரும் கேரள கல்லூரி மாணவர்கள். இவர்களில் ஒரு பெண்ணும் இருந்திருக்கிறார். வார இறுதி நாளன்று இங்கே கூடி, போதை வஸ்துகள் சகிதம்  இவர்கள் ஆட்டம் போடும் விஷயமும் எவ்வித அனுமதியும் பெறாமல் அந்த விடுதி இயங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in