எல்லாப் பவரும் எடப்பாடியாருக்கே!: அதிரடிக்குத் தயாராகிறாரா ஓபிஎஸ்?

எல்லாப் பவரும் எடப்பாடியாருக்கே!: அதிரடிக்குத் தயாராகிறாரா ஓபிஎஸ்?

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

எது நடந்தாலும் அமைதிப் புயலாக வலம் வந்து கொண்டிருந்த ஓபிஎஸ், சிகாகோவில் ஆர்ப்பாட்டம் காட்டிவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்கத் திரளான கூட்டத்தைக் கூட்டிக்காட்டி நாங்கள் ஒன்றும் ஈபிஎஸ்ஸுக்கு இளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தது ஓபிஎஸ் அணி. ஆனால், ஈபிஎஸ் தாயகம் திரும்பியபோது இருபது அமைச்சர்கள் விமானநிலையத்தில் நின்றார்கள். ஓபிஎஸ்ஸுக்கோ மாஃபா பாண்டியராஜன் மட்டுமே விமான நிலையத்தில் காத்திருந்தார்.

பிள்ளையே பார்த்துக் கொண்டார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தின் போது அதிமுக ஐடிவிங் பொறுப்பாளரான ராஜ் சத்யனும் கூடவே சென்றிருந்தார். அவர்தான் அங்கிருந்தபடியே எடப்பாடியாரின் ஒவ்வொரு அசைவையும் சமூக வலைதளங்களில்  வைரலாக்கினார். ஆனால், ஈபிஎஸ் பயணத்தில் ஐடி விங் பொறுப்பாளர்கள் யாரும் உடன் செல்லவில்லை. இதனால் அந்த வேலையை  ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமாரே கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in