சிங்கம் சீறுகிறதா... சீன் போடுகிறதா?- கேடிஆரை நோகாமல் சாடிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்

சிங்கம் சீறுகிறதா... சீன் போடுகிறதா?- கேடிஆரை நோகாமல் சாடிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

"உன்னைப் பார்க்கிறப்ப சின்ன வயசுல என்னைய நானே பார்த்த மாதிரி இருக்குய்யா..." என்று தமிழ் சினிமாவில் ஒரு இத்துப்போன டயலாக் வருமே? அந்த வசனத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பார்த்துப் பேசத் தகுதியானவர் சாத்தூர் ராமச்சந்திரன் எனும் கே.கே.எஸ்.எஸ். ஆர்.

அடிதடி, துப்பாக்கிச்சூடு என்று பெயர் பெற்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர். இப்போது ரொம்பத் தங்கப் பிள்ளையாகிவிட்டார். இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர், 7-வது முறையாக எம்எல்ஏ-வாக இருப்பவர். ஆனாலும்கூட இருக்கிற இடம் தெரியாத அளவுக்கு அமைதி காக்கிறார். ஆனால், விருதுநகர் மாவட்டத்துக்காரரான அமைச்சர் ராஜேந்திரபாலாஜியோ, பின்னிப் பெடலெடுக்கிறார்.

மாவட்டத்தின் ஒரே ஒரு விஐபி தான்தான் என்பது போல, மனிதர் பேட்டி கொடுக்காத நாளில்லை. பேட்டிக்கு காரணமும் தேவையில்லை, கேள்வி கேட்க ஆளும் தேவையில்லை. மைக்கைப் பார்த்தாலே அண்ணனுக்கு கவிதை மாதிரி வார்த்தைகள் வந்து கொட்டும். சும்மா ‘பார்ட் டைம்’மாக ட்விட்டரில் அரசியல் செய்துகொண்டிருந்த கமல்ஹாசனையே, ‘நாக்கை அறுப்பேன்... காதைக் கடிப்பேன்' என்று சொல்லி கட்சி ஆரம்பிக்க வைத்த பெருமைக்குரியவர். வெறும் பேச்சு மட்டுமல்ல, செயல்வீரரும் கூட. அடிதடியில் தொடங்கி கொலை வழக்கு வரையில் அமைச்சர் கேடிஆர் மீது நிலுவையில் இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in