கங்குலிக்கு லக்‌ஷ்மண் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள சவுரவ் கங்குலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள சவுரவ் கங்குலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இப்பதவிக்கான தேர்தல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கங்குலிக்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் கங்குலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் கங்குலியை டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்களின் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் மேலும் வளர்ச்சி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்களின் புதிய பணி வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

READ SOURCE