மனிதன் - பூனை நட்பு வரலாறு தெரியுமா?

செய்திப்பிரிவு

உலகில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் ஒன்று பூனை.

மனிதனுக்கும் பூனைக்கும் இடையிலான பந்தம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.
 

ஒரு நாளைக்கு இயல்பாக 13 முதல் 14 மணி நேரம் வரை தூங்கித் தன் ஆற்றலைச் சேமிக்கக்கூடியது பூனை.

பூனைகளின் உடல் நெகிழ்வானது. எலிகள் போன்ற சிறு உயிர்களைச் சாப்பிடுவதற்கு ஏற்ற கூர்மையான பற்களைக் கொண்டவை.

பூனைகள் முன் கால்களை வைத்த அதே இடத்தில்தான் பின்னங்கால்களையும் வைக்கும். இதனால் சத்தமே இன்றி அவற்றால் வேட்டையாட முடியும்.

பூனைகளுக்குத் துல்லியமான பார்வைத் திறன் உண்டு. குறிப்பாக இரவு நேரத்தில் ஆறு மடங்கு குறைவான ஒளியிலும் பூனைகளுக்குப் பொருட்கள் தெரியும்.

பூனைகளுக்குச் கேட்கும் திறனும், மோப்பத் திறனும் அதிகம். பெரிய பூனைகள் சில சமயங்களில் மிகவும் கோபமாகக் குட்டிகளிடம் நடந்துகொள்ளும்.
 

வீட்டுப் பூனைகளிடம் விளையாட்டுக் குணம் உண்டு.

குட்டிப் பூனைகளிடம் பொம்மை, பந்துகளைக் கொடுத்தால் ரசித்து விளையாடும்.
 

குட்டிப் பூனைகளுக்கு இடையில் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் மூலம் வேட்டையாட கற்றுக்கொள்கின்றன. ஒரு பூனையின் சராசரி ஆயுள் 15 ஆண்டுகள்.

பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை உடலின் மேற்பகுதியை நக்கிச் சுத்தம் செய்வதில் செலவிடும். | தொகுப்பு: ஷங்கர்