செய்திப்பிரிவு
சின்னத் திரையில் இருந்து நகர்ந்து வெள்ளித் திரையில் ஜொலித்து வருபவர் பிரியா பவானி சங்கர்.
செய்தி வாசிப்பாளராக ஊடகப் பணியை துவக்கியபோதே கவனம் ஈர்த்தவர் பிரியா பவானி சங்கர்.
‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பரவலாக அறியப்பட்டார்.
2017-ல் வெளியான ‘மேயாத மான்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, யானை, திருச்சிற்றம்பலம், பத்து தலை, டிமான்ட் காலனி, இந்தியன் 2 என இவரது லிஸ்ட் பெரிது.
இப்போது ‘பெண்குயின்’ இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கம் ‘ஜீப்ரா’ என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.