அரசியல்

விஜய்யிடம் ஆளுநர் ‘கறார்’... சட்டப்படி சரியா, தவறா? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

தமிழகத்​தில் எந்​தக் கட்​சி​யும் 118 தொகு​தி​களை பெற்றிருக்​க​வில்லை எனில் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 4 வழி​முறை​களை பின்​பற்றி ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். முதலாவது, தேர்​தலுக்கு முன்பே அரசி​யல் கட்​சிகள் ஒன்​றாக சேர்ந்து கூட்​டணி அமைத்​திருந்​தால் அந்த கூட்​ட​ணியை அழைக்​கலாம். இரண்டாவது, அதிக இடங்​களை கைப்​பற்​றி​யுள்ள கட்சி போதிய ஆதர​வுடன் இருந்​தால் அந்த கட்​சிக்கு அழைப்பு விடுக்​கலாம். மூன்றாவது, தேர்​தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்சிகள் தங்​களுக்​குள் கூட்​டணி அமைத்து இருந்​தால் அந்த கட்​சிகளை அழைக்கலாம். நான்காவது, வெளி​யில் இருந்து பெறப்​படும் ஆதர​வுடன் பெரும்​பான்​மையற்ற மைனாரிட்டி ஆட்​சியை அமைக்​கும் கட்​சியை அழைக்கலாம்.

தற்​போது விஜய் அதிக இடங்​களை கைப்​பற்​றி​யுள்ள கட்சி என்ற அடிப்​படை​யில் ஆட்​சி​யமைக்க உரிமை கோராமல் கூட்​டணி ஆட்சி எனக்​ கூறி காங்​கிரஸ் ஆதரவு கடிதத்தையும் சேர்த்து ஆளுநரிடம் கொடுத்​ததுதான் வாய்ப்பை நழுவ விட்​டதற்​கான முக்​கிய காரணம் எனக் கூறப்​படு​கிறது. அதிக இடங்​களில் வெற்றி பெற்ற தவெக தலை​வர் விஜய்​யிடம் ஆளுநர் மாளி​கை​யிலேயே பெரும்பான்​மையை நிரூபிக்​கக் கூறியது அரசி​யலமைப்பு சட்ட ரீதி​யாக சரி​யா, தவறா என சென்னை உயர் நீதி​மன்ற சட்ட நிபுணர்​கள் அளித்த விளக்கத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT