எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், “40 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படாத நிலை உள்ளது. வேகமான நகரமயமாக்கலில் வாக்காளரின் புலம்பெயர்வும், வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட காரணத்தால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம்பெறுகின்றன. இதுபோன்ற காரணங்களால் ஏற்படும் துல்லியத்தன்மை பாதிப்பைத் தடுக்கவே எஸ்ஐஆர் பணி அவசியமாகிறது என்ற வாதம் ஏற்கும்படி உள்ளது.
ஜனநாயக முறையின் நம்பகத்தன்மையே வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை சார்ந்துள்ளது. நியாயமான, நேர்மையான தேர்தல் வெறும் வாக்குப் பதிவு முறையில் மட்டும் இல்லை. மாறாக, வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை சார்ந்துள்ளது. எஸ்ஐஆா் பணிகள் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான அரசமைப்பு கடமைக்கு உயிரூட்டுகிறது. எஸ்ஐஆா் பணிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துடன் முரண்படவில்லை. எனவே, எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளதை விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.