அரசியல்

எஸ்ஐஆர் சரியே! - உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், “40 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் செய்யப்ப​டாத நிலை உள்​ளது. வேக​மான நகரமய​மாக்​கலில் வாக்காளரின் புலம்​பெயர்வும், வாக்​காளர் பெயர் சேர்ப்​பு, நீக்​கம் உள்​ளிட்ட காரணத்​தால் வாக்​காளர் பட்​டியலில் பெயர்​கள் ஒன்றுக்​கும் மேற்​பட்ட தொகுதியில் இடம்​பெறுகின்​றன. இது​போன்ற காரணங்​களால் ஏற்​படும் துல்லி​யத்​தன்மை பாதிப்பைத் தடுக்​கவே எஸ்​ஐஆர் பணி அவசி​ய​மாகிறது என்ற வாதம் ஏற்​கும்​படி உள்​ளது.

ஜனநாயக முறை​யின் நம்​பகத்​தன்மையே வாக்​காளர் பட்டியலின் துல்​லி​யத்தை சார்ந்​துள்​ளது. நியாய​மான, நேர்மை​யான தேர்​தல் வெறும் வாக்​குப் பதிவு முறையில் மட்​டும் இல்​லை. மாறாக, வாக்​காளர் பட்​டியலின் நம்​பகத்​தன்​மையை சார்ந்துள்ளது. எஸ்​ஐஆா் பணி​கள் நியாயமான தேர்​தலை நடத்துவதற்கு தேவை​யான அரசமைப்பு கடமைக்கு உயிரூட்டுகிறது. எஸ்​ஐஆா் பணிகள் மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்டத்​துடன் முரண்​படவில்​லை. எனவே, எஸ்​ஐஆா் பணி​களை மேற்கொள்ள தேர்​தல் ஆணை​யத்துக்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளதை விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.

SCROLL FOR NEXT