அரசியல்

அதிமுக 170, பாஜக 23... ‘லீக்’ ஆன லிஸ்ட் பின்னணி

செய்திப்பிரிவு

பாஜக தேர்​தல் பொறுப்​பாளர்​களான மத்​திய அமைச்​சர்​கள் பியூஷ் கோயல், அர்​ஜுன் ராம் மேக்​வால் செவ்வாய்க்கிழமை சென்னை வந்​தனர். எம்​.ஆர்​.சி.நகரில் உள்ள நட்​சத்​திர ஹோட்​டலில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் ஆலோ​சனை நடத்தினர். இந்த ஆலோ​சனை கூட்​டத்​தில், தமிழக அரசி​யல் கள நில​வரம், கூட்​டணி கட்​சிகள் ஒருங்​கிணைப்​பு, ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவகாரம், தொகுதி பங்​கீடு குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. கூட்​ட​ணி​யில் இடம் பெறும் கட்​சிகள் எவ்​வாறு ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என்​பது குறித்​தும் ஆலோ​சனை நடத்​தினர்.

இந்​நிலை​யில், அதி​முக 170 தொகு​தி​களில் போட்​டி​யிட பாஜக​விடம் விருப்பம் தெரி​வித்​துள்​ள​தாக, அதி​முக வியூக வகுப்​பாளர்​கள் தரப்​பில் சில தகவல்​கள் பரப்​பப்​பட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. அதாவது, தமி​ழ​கத்​தில் பாஜக போட்​டி​யிடும் தொகு​தி​களின் பட்​டியலை பழனி​சாமி​யிடம், பியூஷ் கோயல் வழங்​கி​னார். அப்​போது, தமிழகத்​தில் 40 தொகு​தி​களில் பாஜக போட்​டி​யிட விரும்​புவ​தாக அவர் பழனி​சாமி​யிடம் தெரி​வித்​துள்​ளார்.

ஆனால், பாஜக கொடுத்த பட்​டியலை பழனி​சாமி வாங்​க​வில்​லை. மாறாக, அவர் ஒரு பட்​டியலை தயார் செய்​து, பியூஷ் கோயலிடம் வழங்​கி​னார். அதில், தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிடும் ஒவ்​வொரு கட்​சிக்​கும் ஒதுக்​கப்​படும் தொகு​தி​கள் எண்​ணிக்கை குறித்த விவரம் இருந்​தது. அந்​த வகை​யில், அதி​முக 170, பாஜக 23, பாமக 23, தேமு​திக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, ஜி.கே.​வாசன் தரப்பு 3 என தொகு​தி​கள் பிரிக்கப்​பட்டு பட்​டியல் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பட்​டியல் எப்​படி தயார் செய்​யப்​பட்​டது என்​பதை விளக்​கும் வகை​யில், கடந்த 4 தேர்​தல்​களில் ஒவ்​வொரு தொகு​தி​களி​லும், அந்தந்த கட்​சிகள் பெற்ற வாக்​கு​கள் சதவீதம் தொடர்​பான விவரங்​களை​யும் பாஜக​விடம் பழனி​சாமி வழங்​கி​னார். பாமக, தேமு​திக, ஜி.கே.​வாசன் தரப்​புக்கு தேவை​யான தொகு​தி​களை வழங்கி அவர்​களை அதி​முக ஒருங்​கிணைக்​கும். ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பை பாஜக ஒருங்​கிணைத்​துக் கொள்​ளட்​டும் என பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

அதே​நேரம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதி​முக தலை​மையை ஏற்க வேண்​டும், முதல்​வர் வேட்​பாளர் தொடர்​பாக அவர்​கள் இரு​வ​ரும் எந்த கருத்​தும் தெரிவிக்க கூடாது என்​றும் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். மேலும், ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்​ட​ணி​யில் சேர்ப்​பது குறித்து தற்​போது எந்த அறி​விப்​பும் வெளி​யிட வேண்​டாம். ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகு மெகா கூட்​டணி அறி​விப்பை வெளி​யிடும் போது பார்த்​துக் கொள்​வோம். கூட்​ட​ணி, தொகுதி பங்​கீடு தொடர்​பாக எந்த பேச்​சு​வார்த்​தை​யிலும் அண்​ணா​மலை இடம் பெறக்​கூ​டாது என பழனி​சாமி திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளார்.

பழனி​சாமி கொடுத்த பட்​டியலை பெற்​றுக் கொண்ட பாஜக, அந்த பட்​டியல் தொடர்​பாக மேலிடத்​தில் ஆலோ​சனை நடத்​திய பிறகு, அடுத்​தக்​கட்ட தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்​தை​யின் போது தொகு​தி​களை இறுதி செய்து கொள்​ளலாம் என தெரி​வித்​துள்​ள​தாக​வும், அடுத்த வாரம் இரண்​டாம் கட்ட பேச்சு வார்த்தை நடை​பெறும் என்​றும் அதி​முக வியூக வகுப்​பாளர்​கள் தரப்​பில் இருந்து தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது.

SCROLL FOR NEXT