தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலி இடங்களில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, பொதுத்தேர்வு நடைபெறும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர்கள் என மொத்தம் 1,996 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.
இதன் எதிரொலியாக, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வரும் தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் நிலை உள்ளது. அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பிரச்சினையை அலசும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.