தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், “நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு” என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது. அதில், நீதித் துறையின் ஊழல் குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அத்துடன், என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த சர்ச்சையின் பின்னணியை முழுமையாக விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.