அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்தது. இதன் காரணமாக எரிசக்தி விநியோக தடைகளால் உலக பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. யூனிகிரெடிட் நிறுவனத்தின் முதலீட்டு நிறுவனம் ‘ஹார்முஸ் ஜலசந்தி அதிர்ச்சி’ என்ற தலைப்பில் காலாண்டு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள் ஆகியவை குறித்து சர்வதேச முதலீட்டாளர்களுக்குத் தேவையான முக்கியமான கணிப்புகளை வழங்கிய அறிக்கை குறித்து விரிவாக அலசுகிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.