வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் காலை வேளைகளில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். | படங்கள்: விஜய் வர்மாடெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், சண்டிகர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.குறிப்பாக காலையில் பனிப்பொழிவு கூடுதலாக இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தயங்க வேண்டிய நிலை உள்ளது. பலர், நெருப்பு மூட்டி அனலில் குளிர்காய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்.கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியின் பிரதான சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும் சில நாட்களுக்கு அடர் பனி நீடிக்கும் என டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் அதிகாலை நேரங்களில் அடர் பனி அதிகம் இருக்கும் என தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.இத்தகைய நேரங்களில் போதிய வெளிச்சம் இருக்காது என்பதால் சாலைப் பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.