தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. | படங்கள்: ஜெ மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி.மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.பாடவாரியாக தமிழில் 8 பேர், ஆங்கிலத்தில் 415 பேர், கணிதத்தில் 20,691 பேர், அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4,428 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர் 97.31% உடன் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.10-ஆம் பொதுத் தேர்வில் 87.90% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.அரியலூர் மாவட்டத்தில் 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் 97.02 சதவிகிதம் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் 96.36 சதவிகிதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவிகிதம் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும், திருச்சி மாவட்டம் 95.23 சதவிகித தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.82.07 சதவீதத்துடன் வேலூர் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் உள்ளது.வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.தலைநகர் சென்னை 88.21 சதவீதத்துடன் 30-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களில் 96.85 சதவிகிதமும், ஆங்கிலத்தில் 99.15 சதவிகிதமும், கணிதத்தில் 96.78 சதவிகிதமும், அறிவியலில் 96.72 சதவிகிதமும், சமூக அறிவியலில் 95.74 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 13510. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 12491 ஆகும்.தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 260. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 228 (87.69%) ஆகும். | படங்கள்: ஜெ மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி.இடம்: கோவை | படங்கள்: ஜெ மனோகரன்மதுரை மாவட்ட அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தடகள போட்டி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்திபுதுச்சேரி மணிமேகலை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒட்டப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு பட்டியலை ஆர்வத்தோடு பார்வையிட்ட பள்ளி மாணவிகள். | படங்கள்: எம்.சாம்ராஜ்அட்சய திருதியை முன்னிட்டு தங்கநகை கடையில் நகைகளை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம். | இடம்: நேரு வீதி, புதுச்சேரி. | படங்கள்: எம்.சாம்ராஜ்மதுரையின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. | படங்கள்: ஆர்.அசோக்