தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் ‘கூவாகம் திருவிழா - 2026’ எனும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. தேசிய விருது பெற்ற திரைப் பட நடிகை அர்ச்சனா, விழுப்புரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருது பெற்ற பொன்னி பரத குழுவினரின் பரத நாட்டியம் அரங்கேற்றப்பட்டது.
மேலும் திருநங்கைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதித்துள்ள 25 திருநங்கைகள் கவுரவிக்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
திருநங்கை களுக்கான மிஸ் திருநங்கை அழகி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 12 பேர் பங்கேற்றனர்.
மிஸ் திருநங்கையாக சென்னையை சேர்ந்த ஓமனா தேர்வு செய்யப் பட்டார்.
இரண்டாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த சாய் ஸ்ரீயும் மற்றும் மூன்றாவது இடத்தை சென்னையை சேர்ந்த ஸ்விகியும் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்ற மூவருக்கும் கிரீடம் அணிவித்து நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர்.
மேலும், திரைப்பட இயக்குநர் மரியராஜா இளஞ்செழியன், கானா பாடகர் வினோத் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.