சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற சாகச நிகழ்ச்சிகள்.பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கான பயிற்சி கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது.எதிரிகளை தாக்குதல், துப்பாக்கிச்சுடுதல், நெருப்பு வளையங்களைத் தாண்டுதல், ஜிம்னாஸ்டிக், குதிரை ஏற்றம், தற்காப்புக் கலைகள் உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.பயிற்சி நிறைவுபெற்ற ராணுவ அதிகாரிகளின் சாகசங்களை, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.