உலகம்

ஸ்பேஸ் எக்ஸ் ஊழியருக்கு வழங்கிய பங்கு மூலம் வெல்டருக்கு கிடைத்தது ரூ.10 கோடி லாபம்

செய்திப்பிரிவு

புளோரிடா: ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. இதன்மூலம் (ஐபிஓ), அந்​நிறு​வனத்​தில் முன்பு வெல்ட​ராக பணி​யாற்​றிய​வரின் பங்கு மதிப்பு ரூ.10 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

தொழில​திபர் எலான் மஸ்க்​கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தில், ஜுவான் ஹெர்​னாண்​டஸ் என்​பவர் கடந்த 2015-ம் ஆண்​டில் வெல்ட​ராக பணி​யில் சேர்ந்​தார். பின்பு ராக்​கெட் ஏவுதள உள்கட்டமைப்​பு​களை உரு​வாக்​கு​வ​தில் உதவி​யாள​ராக பணியாற்​றி​னார். பின்பு மேற்​பார்​வை​யாள​ராக பதவி உயர்வு பெற்​றார்.

அப்​போது ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் தனது ஊழியர்​களுக்கு நிறுவன பங்​கு​களை வழங்​கு​வதை வழக்​க​மாக கொண்​டிருந்​தது. அதை அப்​போது ஜுவான் ஹெர்​னாண்​டஸ் பெரிய விஷய​மாக கருத​வில்​லை. ஏனென்​றால், அவர் முன்பு பணி​யாற்​றிய நிறு​வனங்​களில் ஊழியர்​களுக்கு இது போல் பங்​கு​கள் வழங்​கு​வது வழக்​கம் இல்​லை.

ஸ்பேஸ்​எக்ஸ் நிறு​வனத்​தில் 10 ஆண்​டு​கள் பணி​யாற்​றிய ஹெர்னாண்​டஸ், சுமார் 6,500 ஸ்பேஸ் எக்ஸ் பங்​கு​களை வைத்திருந்​தார். ஜுவான் ஹெர்​னாண்​டஸ் தற்​போது ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தில் இருந்து வெளி​யேறி புளூ ஆரிஜின் நிறுவனத்தில் பணி​யாற்​றுகிறார்.

இந்​நிலை​யில் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் தனது 7.13 லட்​சம் கோடி பங்​கு​களை நாஸ்​டாக் பங்​குச் சந்​தை​யில்(ஐபிஓ) பட்டியலிட்​டது. முதல் நாளில் ஒரு பங்​கு விலை 160.95 டால​ராக உயர்ந்​தது. இதன் மூலம் ஜுவான் ஹெர்​னாண்​டஸ் பங்​கு​களின் மொத்த மதிப்பு 1 மில்​லியன் டாலருக்கு (ரூ.9.95 கோடி) உயர்ந்​துள்​ள​தால் அவர் கோடீஸ்​வர​ராக மாறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT