உலகம்

எரிபொருள் நெட்வொர்க்கை சிதைக்க ரஷ்யாவின் 2 கப்பல்களை அழித்தோம்: உக்ரைன் அதிபர் தகவல்

செய்திப்பிரிவு

கீவ்: ரஷ்​யா​வின் 2 எண்​ணெய் கப்​பல்​களை உக்​ரைன் ராணுவம் தாக்கி அழித்​தது என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்​ஸ்கி தெரிவித்​துள்​ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்​டோ​ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த உக்​ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் போர் தொடங்​கியது. கடந்த 4 ஆண்​டு​களாக இரு நாடு​களும் ஒன்​றின் மீது ஒன்று தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், டெலிகி​ராம் சமூக வலை​தளத்​தில் உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி வெளியிட்ட பதி​வில் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: ரஷ்​யா​வின் எரிபொருள் நெட்​வொர்க்கை சிதைக்க உக்​ரைன் தொடர்ந்து கவனம் செலுத்தி வரு​கிறது. அந்த வகை​யில் ரஷ்​யா​வின் நிழலாக செயல்​பட்டு வந்த 2 எண்​ணெய் கப்​பல்​களை ட்ரோன்​கள் மூலம் தாக்கி அழித்​தோம்.

அந்​தக் கப்​பல்​கள்​தான் ரஷ்ய கச்சா எண்​ணெய்யை கொண்டு சென்று வந்​தன. இப்​போது அந்த கப்​பல்​கள் இல்​லை. அந்த 2 கப்​பல்​களை​யும் ரஷ்​யா​வின் நோவோ​ராசி​யிக் துறை​முகத்​தின் நுழைவு வாயில் பகு​தி​யில் தாக்கி அழிக்​கப்​பட்​டது. தரை, வான், கடல் வழி​யாக தொலை​தூர இலக்கை தாக்​கும் உக்​ரைனின் ராணுவ நடவடிக்கை தொடரும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

உயி​ரிழப்பு எது​வும் இல்லை: முன்​ன​தாக ரஷ்ய பாது​காப்​புத் துறை அமைச்​சகம் வெளி​யிட்ட தகவலில், “ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்​றும் லெனின்​கிரேன் உட்பட 15 பகு​தி​களில் தாக்​குதல் நடத்த அனுப்​பிய உக்​ரைனின் 334 ட்ரோன்​களை இடைமறித்து அழித்​தோம். இதில் உயி​ரிழப்பு எது​வும் ரஷ்ய தரப்​பில் இல்​லை” என்று கூறி​யிருந்​தார்.

SCROLL FOR NEXT