பாகிஸ்​தான் அமைச்​சர் அலி பெர்​வேஸ் மாலிக்

 
உலகம்

நாங்கள் இந்தியாவைப் போல் இல்லை; எரிபொருள் வளத்தில் நிலைமை மோசம் - பாகிஸ்​தான் அமைச்சர் ஒப்புதல்

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: ​சர்​வ​தேச அளவில் கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் போர் பதற்​றம் காரண​மாகப் பாகிஸ்​தானில் பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்​களின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. இந்​நிலை​யில் பாகிஸ்​தானின் சமா டிவிக்கு அளித்த பேட்டி பாகிஸ்​தான் அமைச்​சர் அலி பெர்​வேஸ் மாலிக் கூறிய​தாவது:

எரிபொருள் வளத்​தில் பாகிஸ்​தான் நிலைமை மோச​மாகவே இருக்​கிறது. பாகிஸ்​தானிடம் தற்​போது அவசர கால (போர்) தேவைக்​கான எரிபொருள் இருப்பு ஒரு நாள் கூட கிடை​யாது என்​பதே உண்​மை. எங்​களிடம் இருப்​பது வணிக ரீதி​யான இருப்பு மட்​டுமே.

கச்சா எண்​ணெய் 5 முதல் 7 நாட்​களுக்கு மட்​டுமே வரும். எண்​ணெய் நிறு​வனங்​களிடம் உள்ள சுத்​தி​கரிக்​கப்​பட்ட எரிபொருள் அதி​கபட்​சம் 20 முதல் 21 நாட்​களுக்கு மட்​டுமே இருக்​கும்.

நாங்​கள் இந்​தி​யா​வைப் போன்​றவர்​கள் அல்ல. இந்​தி​யாவோ 70 நாட்​களுக்​குத் தேவை​யான எரிபொருளைச் சேமித்து வைத்துள்ளது. அங்கு ஒரு நெருக்​கடி ஏற்​பட்​டால், ஒரு கையெழுத்​தில் அந்த இருப்பை வெளி​யிட்டு அவர்​களால் நிலை​மை​யைச் சீர் செய்ய முடி​யும். நீண்ட காலத்​துக்கு எரிபொருள் தேவையைச் சமாளிக்க இயலும். ஆனால், பாகிஸ்​தான் எளி​தில் நிலைகுலையும் நிலையில் உள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT