அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட்
டாவோஸ்: உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு வந்த அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட், பொலிட்டிகோ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால் அதன் மீது நாங்கள் கூடுதலாக 25 சதவீத வரி விதித்தோம். இது எங்களுக்கு வெற்றி. தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை நீக்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் இந்தியா மீதான கூடுதல் வரி நீக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிப்பது தொடர்பான மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடைபெறும் நிலையில், இந்தியா மீதான கூடுதல் வரி நீக்கப்படலாம் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.