உலகம்

ஹெச்-1பி, கிரீன் கார்டு விதிகளை கடுமையாக்க அமெரிக்கா திட்டம்: இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்காவின் குடியேற்ற அமைப்பை வெளிநாட்டு வல்​லுநர்​கள், மாணவர்​கள் மற்​றும் நிறுவனங்கள்கையாள்​வதைக் கடின​மாக்​கும் வகை​யில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் புதிய விதி​களைத் தயாரிப்ப​தாக தகவல் வெளியாகி உள்​ளது.

குறிப்​பாக, ஹெச்​-1பி, கிரீன் கார்டு மற்​றும் மாணவர் விசாக்​களில் முக்​கிய மாற்​றம் கொண்டு வரப்பட உள்​ளது. இதனால் அமெரிக்கா​வில் உள்ள வெளி​நாட்​டுப் பணி​யாளர்​கள் மற்​றும் மாணவர்​களில் இந்​தி​யர்​களே பெரும்​பான்​மை​யாக இருப்​ப​தால், புதிய விதி​முறை​கள் இந்​தி​யர்​களுக்கு கூடு​தல் சிக்​கலை ஏற்படுத்தும் என அஞ்​சப்​படு​கிறது.

குறிப்​பாக, இந்​திய ஐடி நிறு​வனங்​கள் அதி​கம் பயன்​படுத்​தும் ‘மூன்​றாம் தரப்பு வாடிக்​கை​யாளர் தளங்​களில்’ பணி​யமர்த்​தும் முறைக்​குக் கடுமை​யான நிபந்​தனை​கள் விதிக்​கப்​படும். மேலும், 50-க்​கும் மேல் பணி​யாளர்​களைக் கொண்​டு, அதில் பாதிப்பேர் ஹெச்​-1பி/எல்-1 விசா​வில் உள்ள பெரிய நிறு​வனங்​கள், இனி விசா நீட்​டிப்பு விண்​ணப்​பங்​களுக்​கும் கூடு​தல் கட்​ட​ணம் செலுத்த வேண்டி இருக்​கும்.

ஹெச்​-1பி மற்​றும் ‘பெர்ம்’ (PERM) சான்​றிதழ்​களுக்​கான குறைந்​த​பட்ச ஊதிய வரம்பு 17%-லிருந்து 34% ஆக உயர்த்​தப்​படும். இதனால் நிறு​வனங்​களுக்கு செல​வு​கள் அதி​கரிக்​கும். இதுபோன்ற பல முன்​மொழி​வு​கள் இன்​னும் சட்டமாக்கப்படவில்லை. இவை பொது​மக்​களின் கருத்​துகள் மற்றும் சட்​டச் சவால்​களைக் கடந்தே அமலுக்கு வரும். இருப்பினும், ட்ரம்ப் நிர்​வாகத்​தின் இந்த நடவடிக்கை இந்​திய வல்லுநர்​கள் மற்​றும் மாணவர்​களிடையே பெரும் கவலையை ஏற்படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT