உலகம்

இலங்கை அதிபருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: இருதரப்பு பாதுகாப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

கொழும்பு: மூன்று நாள் அரசு​முறைப் பயண​மாக இலங்கை சென்​றுள்ள மத்திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங், இலங்கை அதிபர் அனுரா குமார திச​நாயக்​கவை கொழும்​பில் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

38 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் இலங்​கைக்​குப் பயணம் மேற்​கொள்​வது இதுவே முதல்​முறை​.

இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்கையில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது:

இலங்கை அதிபர் திச​நாயக்​க​வின் அரசு இரண்டு ஆண்டு கால ஆட்​சியை நிறைவு செய்​ததற்​காக பிரதமர் நரேந்​திர மோடி​யின் வாழ்த்​துகளை ராஜ்​நாத் சிங் அவரிடம் பகிர்ந்து கொண்​டார். இந்​தி​யா​வும், இலங்​கை​யும் வரலாற்று ரீதி​யாக​வும் நாகரீக ரீதி​யாக​வும் இரட்​டையர்​கள் போன்ற பிணைப்​பைக் கொண்​டது. பிராந்​தி​யத்​தின் பாது​காப்​பு, அமைதி மற்​றும் செழிப்பை உறுதி செய்ய இணைந்து செயல்பட இரு நாடு​களும் உறுதி பூண்​டுள்​ளன.

இந்​தி​யா​வின் பாது​காப்பு நலன்​களுக்​குப் பாதக​மான எந்​தவொரு நடவடிக்​கைக்​கும் இலங்​கை​யின் நிலப்​பரப்​பைப் பயன்​படுத்த அனு​ம​திக்க மாட்​டோம் என்று அதிபர் திச​நாயக்க மீண்​டும் உறுதி அளித்​துள்​ளார்.

மேலும், டிட்வா புயலின் போது ஆபரேஷன் சாகர் பந்து மூலம் இந்​தியா வழங்​கிய நிவாரண உதவி​களுக்​கு் இலங்கை அதிபர் நன்றி தெரி​வித்​தார்.

இந்​தி​யப் பாது​காப்​புப் படை​யின​ரால் அமைக்​கப்​பட்ட மூன்று ‘பெய்​லி’ பாலங்​களை இரு தலை​வர்​களும் காணொலி வாயி​லாகத் திறந்து வைத்​தனர்.இலங்கை விமானப் படை​யின் பயன்​பாட்​டில் உள்ள எல்​-70 ரக துப்​பாக்​கி​களை தரம் உயர்த்​து​வது உள்ளிட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் இந்த சந்​திப்​பின்​போது கையெழுத்​தாகின. இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கொழும்பில் உள்ள இந்தியச் சமூகத்தினரிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், கஷ்டமான காலங்களில் இந்தியா எப்போதும் இலங்கையின் பக்கம் உறுதியாக நிற்கும் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT