உலகம்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு காலவரையின்றி நீட்டிப்பு: ட்ரம்ப் தகவல்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஈ​ரான் உடனான போர் நிறுத்​தத்தை கால​வரை​யின்றி நீட்​டிக்க உள்​ள​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

மேற்​காசிய நாடான ஈரானுக்கு எதி​ராக அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் கடந்த பிப்​.28-ம் தேதி போர் தொடுத்​தன. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க ராணுவ தளங்​கள் அமைந்​துள்ள வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. இந்த நிலை​யில், கடந்த 8-ம் தேதி அமெரிக்கா - ஈரான் இடையே 2 வாரங்​களுக்கு போர் நிறுத்​தம் அமல்​படுத்​தப்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக, பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்​கா, ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையே கடந்த 11, 12-ம் தேதி​களில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில், அமெரிக்​கத் தரப்​பில் விதிக்​கப்​பட்ட சில நிபந்​தனை​களை ஈரான் ஏற்​க​வில்​லை. குறிப்​பாக, யுரேனி​யத்தை செறி

வூட்​டும் திட்​டத்தை (அணு ஆயுதம்) கைவிட ஈரான் திட்​ட​வட்​ட​மாக மறுத்​து​விட்​டது.

மேலும், ‘ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் கட்​டுப்​பாடு தொடர்ந்து ஈரான் கட்​டுப்​பாட்​டிலேயே இருக்​கும். இந்த ஜலசந்தி வழி​யாக செல்​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​களுக்கு சுங்​கவரி விதிப்​போம்’ என்​றும் ஈரான் அறு​தி​ யிட்டு கூறியது. அதே​போல, அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலால் ஏற்​பட்ட சேதத்​துக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தி​யது. இந்த 3 விவ​காரங்​களால் அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்​த​தாக தகவல்​கள் வெளி​யாகின.

இஸ்​லா​மா​பாத்​தில் 2-ம் சுற்று பேச்​சு​வார்த்தை 22-ம் தேதி (நேற்​று) நடை​பெறக்​கூடும். அமெரிக்​கத் துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இதில் பங்​கேற்​பார் என்று தகவல் வெளி​யான நிலை​யில், அவரது பாகிஸ்​தான் பயணத்தை வெள்ளை மாளிகை நிறுத்தி வைத்​தது.

இதற்​கிடையே, அமெரிக்கா - ஈரான் இடையி​லான 2 வார போர் நிறுத்​தம் நேற்று முடிவடைய இருந்த நிலை​யில், போர் நிறுத்​தத்தை கால​வரை​யின்றி நீட்​டிக்க உள்​ள​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். பாகிஸ்​தான் கோரிக்​கையை ஏற்று இந்த நடவடிக்​கையை எடுப்​ப​தாக அவர் தனது ட்ரூத் வலை​தளப் பதி​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

போர் நிறுத்​தத்தை நீட்​டிக்க வேண்​டும் என்று ஈரான் தரப்​பில் எந்த கோரிக்​கை​யும் விடப்​ப​டாத நிலை​யில், ட்ரம்ப் தானாக முன்​வந்து இந்த அறி​விப்பை வெளி​யிட்​டுள்​ளார். இருப்​பினும், ஏற்​றுக்​கொள்​ளத்​தக்க ஒரு தீர்​வுக்கு ஈரான் வரும் வரை அந்​நாட்டு துறை​முகங்​கள், கடற்​கரைப் பகு​தி​களில் அமெரிக்க கடற்​படை​யின் முற்​றுகை தொடரும் என்​றும் அவர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகரின் ஆலோ​சகர் கூறும்​போது, ‘‘ட்​ரம்ப்​பின் இந்த அறி​விப்பு போலி​யானது. இது திடீர் தாக்​குதலுக்கு அவகாசம் பெறு​வதற்​கான தந்​திரம்’’ என்​றார். இதற்​கிடையே, ஈரான் அரசுக்​காக ஆயுதங்​கள், உதிரி​பாகங்​களை கொள்​முதல் செய்​து, அவற்றை கொண்டு செல்​லும் நெட்​வொர்க்கை குறி​வைத்​து, ஈரானுடன் தொடர்​புடைய 14 தனி​நபர்​கள், நிறு​வனங்​கள், விமானங்​களுக்கு அமெரிக்கா தடை விதித்​துள்​ளது.

அமெரிக்க கரு​வூலத் துறை​யின் வெளி​நாட்டு சொத்​துக் கட்​டுப்​பாட்டு அலு​வல​கம் இந்த நடவடிக்​கையை அறி​வித்​தது. இந்த தடை​யின்​கீழ் வருபவர்​கள்​ ஈரான்​, துருக்​கி, ஐக்​கிய அரபு அமீரகத்​தில்​ இருப்​ப​தாக​வும்​ கூறியுள்​ளது.

SCROLL FOR NEXT