வங்கதேச வன்முறைகளுக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த ஆர்ப்பாட்டம் | கோப்புப் படம்

 
உலகம்

வங்கதேசத்தில் மேலும் ஓர் இந்து நபர் சுட்டுக் கொலை: 3-வது சம்பவத்தால் அச்சம்

வெற்றி மயிலோன்

மைமன்சிங்: தீபு தாஸ் மற்றும் அம்ரித் மொண்டலுக்குப் பிறகு, வங்கதேசத்தில் இஸ்லாமிய கும்பலால் மற்றொரு இந்துவான பஜேந்திர பிஸ்வாஸ் என்பவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை எழுப்பியுள்ளது.

வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆடைத் தொழிற்சாலையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரிந்த ஓர் இந்து ஊழியர் பஜேந்திர பிஸ்வாஸ் (42), சக ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில், பலுகா உபஜிலா பகுதியில் அமைந்துள்ள லபிப் குழுமத்திற்குச் சொந்தமான சுல்தானா ஸ்வெட்டர்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் நடந்தது.

இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட நோமான் மியா (29) என்பவரும் அதே பிரிவில் பணிபுரிந்து வந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறைகளுக்குப் பின்னர் முதலாவதாக மைமன்சிங்கில் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இதனை தொடர்ந்து இரண்டாவதாக ராஜ்பாரியின் பாங்ஷா மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் அன்று இந்து இளைஞரான அம்ரித் மொண்டல் கொல்லப்பட்டார். ஆனால், மொண்டலின் கொலை மத ரீதியான தாக்குதல் அல்ல, மாறாக மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்று காவல் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த கொலைகள் தொடர்பாக இதுவரை 12 பேரைக் கைது செய்துள்ளன.

தீபு சந்திர தாஸின் கொலை, டாக்கா மற்றும் வங்கதேசத்தில் உள்ள பிற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடையே பரவலான போராட்டங்களைத் தூண்டியது. இந்த கொலைக்காக இந்தியாவும் தனது கவலைகளைத் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, “முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராக சொல்ல முடியாத அட்டூழியங்களைச் செய்கிறது. மதச் சிறுபான்மையினரை உயிருடன் எரிப்பது போன்ற கொடூரமான முன்னுதாரணங்களை ஏற்படுத்துகின்றனர்” என குற்றம் சாட்டினார்.

SCROLL FOR NEXT