உலகம்

8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு இல்லையா? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரக்தி

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: வெனிசுலா​வில் கச்சா எண்​ணெய் எடுப்​பது குறித்து அமெரிக்க எண்​ணெய் நிறுவன நிர்​வாகி​களு​டன் வெள்ளை மாளி​கை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்​தினம் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது:

மக்​களுக்கு என்​னைப் பிடிக்​கிறதோ, இல்​லை​யோ, நான் மிகப் பெரிய அளவில் நடை​பெற​விருந்த 8 போரை நிறுத்​தினேன். இவற்​றில் சில 36 ஆண்​டு​கள், 32 ஆண்​டு​கள் நடை​பெற்​றவை. இந்​தியா - பாகிஸ்​தான் போரில் 8 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. அமெரிக்கா வந்த பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அணு ஆயுதங்​கள் வைத்​திருக்​கும் இரு நாடு​கள் இடையே நடை​பெற இருந்த போரை நிறுத்தி லட்​சக்​கணக்​கானோரை காப்​பாற்​றிய​தாக என்னை பாராட்​டி​னார்.

எனது 2வது ஆட்சி காலத்​தில் 8 மாதத்​தில் 8 போர்​களை நிறுத்​தி​ய​தால், நோபல் பரிசு பெற, வரலாற்​றில் என்​னை​விட தகு​தி​யானவர் வேறு யாரும் இல்​லை. ஒபா​மாவுக்கு நோபல் பரிசு கிடைத்​தது. அவருக்கு அதைபற்றி எது​வுமே தெரி​யாது. அவருக்கு எதற்​காக நோபல் பரிசு வழங்​கப்​பட்​டது? எது​வும் செய்​யாமல் அமெரிக்க அதிப​ராக பதவி​யேற்​றவுடனே, அவர் நோபல் பரிசு பெற்​றார். இவ்​வாறு ட்ரம்ப் கூறி​னார்.

புதினை கைது செய்​வீர்​களா? - கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்​குதலை நடத்​தி​யது. அந்த நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலாயா புளோரஸ் கைது செய்​யப்​பட்​டு, நியூ​யார்க் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இதே​போல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்​வீர்​களா என்று அமெரிக்க அதிபர் ட்ரம்​பிடம் நிருபர்​கள் நேற்று கேள்வி எழுப்​பினர்.

அதற்கு ட்ரம்ப் கூறும்போது, ‘‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்ய அவசி​யம் இருக்​காது. அதற்​கான தேவை எழாது. அதிபர் புதினு டன் நல்​லுறவு நீடிக்​கிறது. ஆனா லும் சில விவ​காரங்​களில் ஏமாற்​றம் நீடிக்​கிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT