உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கீவ்: ரஷ்​யா​வும் உக்​ரைனும் 2022 பிப்​ர​வரி முதல் போரிட்டு வரு​கின்​றன. இதில் ஏராளமானோார் உயிரிழந்தனர். இந்​நிலை​யில் உக்​ரைன் மீது ரஷ்யா நேற்று முன்​தினம் இரவு கடும் தாக்​குதல் நடத்​தி​யது.

இதுகுறித்து உக்​ரைன் அதி​காரி​கள் நேற்று கூறுகை​யில், “36 ஏவு​கணை​கள், 242 டிரோன்​களை பயன்​படுத்தி இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் கீவ் நகரில் 4 பேர் இறந்​தனர். 22 பேர் காயம் அடைந்​தனர்” என்​றனர். இந்த தாக்​குதலுக்கு உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT