உலகம்

பொருளாதார தடைகள் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால் பூமராங் போல் திரும்பி தாக்கும்: புதின் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மாஸ்கோ: ‘‘​நாட்டு நலன் கரு​தியே இந்​தியா செயல்​படு​கிறது. அதற்​குப் பொருளா​தார தடைகள் மூலம் அழுத்​தம் கொடுத்​தால், அது பிரதமர் மோடி தலை​மை​யின் கீழ் பூம​ராங் போல் திரும்பி தாக்​கும்’’ என அமெரிக்கா​வுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

ரஷ்​யா​வின் செயின்ட் பீட்​டர்ஸ் சதுக்​கத்​தில் நடை​பெற்ற சர்​வ​தேச பொருளா​தார கூட்​டமைப்​பில் பங்​கேற்ற ரஷ்ய அதிபர் புதின் பேசி​ய​தாவது:

இந்​தியா தனது நாட்டு நலனை கருத்​தில் கொண்டு முடிவு​களை எடுக்​கிறது. ரஷ்​யா​வுடன் உள்ள உறவு​கள் காரண​மாக அழுத்​தங்​களைச் சந்​தித்​தா​லும் இந்​தியா தொடர்ந்து தனது நாட்டு நலனைக் கருத்​தில் கொண்​டு​தான் செயல்​படும்.

இந்​தியா எப்​போதும் இறை​யாண்​மைமிக்க நாடாக செயல்​படு​கிறது. அதற்​குக் காலத்​துக்கு ஏற்ற தனது தேவை​கள் மற்​றும் பொருத்​த​மானவற்​றைத் தேர்ந்​தெடுக்க முழு சுதந்​திரம் உள்​ளது. அதற்கு தடைகள் விதிக்​கப்​படும் என அச்​சுறுத்​தல் விடுக்​கப்​பட்​டால், அது பிரதமர் மோடி தலை​மை​யின் கீழ் பூம​ராங் போல் திரும்​பும்.

ரஷ்​யா​விடம் இருந்து சுகோய்​-57 ரக போர் விமானம், எஸ்​-500 வான் பாது​காப்பு ஏவு​கணை ஆகிய​வற்றை இந்​தியா வாங்​கி​னால், அமெரிக்​கா​விடம் இருந்து பொருளா​தார தடைகள் என்ற அழுத்​தம் ஏற்​படும் வாய்ப்​பு​கள் உள்​ளன. ஆனால், இந்​தியா எப்​போதும் தனது நாட்டு நலன் கரு​தியே சுதந்​திர​மான வெளி​யுறவுக் கொள்​கை​யைப் பின்​பற்​றும்.

இந்​தி​யா​வுட​னான ரஷ்​யா​வின் பாது​காப்பு ஒத்​துழைப்​பு, மாறும் அரசி​யல் சூழ்​நிலையை சார்ந்​தது அல்ல. இந்​தி​யா​வுட​னான எங்​கள் ஒத்​துழைப்​பு, நாங்​கள் மற்ற நாடு​களு​டன் கொண்​டிருப்​பது போல் எப்​போதும் இருக்​கும்.

இந்​தி​யா​வுடன் செய்து கொண்ட ஒப்​பந்​தப்​படி ரஷ்யா தொடர்ந்து செயல்​படும். நாங்​கள் இந்​தியா போன்ற நட்பு நாடு​களு​டன் செய்து கொண்ட உறு​திப்​பாட்​டுக்கு எப்​போதும்​ உண்​மை​யாக இருப்​போம்​. இவ்​வாறு பு​தின்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT