உலகம்

இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்: நியூஸிலாந்து தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

செய்திப்பிரிவு

ஆக்லாந்து: “இந்​தியா - நியூஸிலாந்து நாடு​களுக்கு முன்​னால் வாய்ப்​பு​கள் நிறைந்த பெருங்​கடல் உள்​ளது. அதற்கு சாதக​மான காற்று வீசுகிறது. எனவே, இந்​தி​யா​வில் முதலீடு செய்ய நியூசிலாந்து நாட்டு தொழில​திபர்​கள் முன்வர வேண்​டும்” என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்​தார்.

இந்​தோ​னேசி​யா, ஆஸ்​திரேலி​யா​வைத் தொடர்ந்து பிரதமர் மோடி நியூஸிலாந்து நாட்​டுக்​குச் சென்​றுள்​ளார். அங்கு நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்​டோபர் லக்​சனைச் சந்​தித்​துப் பேசி​னார்.

அதன்பின் நியூஸிலாந்​தின் வணி​கத் தலைநகர் ஆக்​லாந்து நகரில் அந்​நாட்​டின் முன்​னணி தொழில்​துறை மற்​றும் பன்​னாட்டு நிறு​வனங்​களின் தலை​மைச் செயல் அதி​காரி​கள் (சிஇஓ), தொழில​திபர்​கள், முதலீட்டு நுகர்​வோர்​கள் பங்​கேற்ற பிரம்​மாண்ட கலந்​துரை​யாடல் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. அப்போது பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

கடந்த 40 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​திய பிரதமர் ஒரு​வர் நியூஸிலாந்​துக்கு வந்​துள்​ளது சிறப்​பு. இது எனக்கு கிடைத்த அதிர்​ஷ்டம். ஆக்​லாந்து முதல் வெலிங்​டன் வரை​யிலும், கிறிஸ்ட் சர்ச் முதல் குயின்​ஸ்​ட​வுன் வரையிலும் நியூஸிலாந்​தின் அனைத்து பகு​தி​களி​லும் இந்​தி​யர்​கள் பரவி உள்​ளனர். இந்​திய வம்​சாவளி​யினர் இங்கு உயர் பதவி​யில் உள்​ளனர். ஏர் நியூஸிலாந்து சிஇஓ-ஆக நிகில் ரவி சங்​கர் ஆனதும், ஆனந்த் சத்​யானந்த் கவர்​னர் ஜெனரல் ஆனதும் இந்த நியூஸிலாந்​தில்​தான். ரச்​சின் ரவீந்​தி​ரா, இஷ் சோதி, அஜாஸ் படேல் ஆகியோர் நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி​யில் விளை​யாடி வரு​கின்​றனர். நியூஸிலாந்​தில், அதன் தெருக்​களுக்கு பெயர் வைப்​ப​தில் கூட இந்​திய நகரங்​களுக்கு பெருமை கிடைக்​கிறது.

பாம்பே ஹில்​ஸ், கோரமண்​டல், கல்​கத்தா ஸ்ட்​ரீட், டெல்லி கிரசென்ட், அமிர்​தசரஸ் ஸ்டிரீட் எனப் பெயரிடப்​பட்ட இடங்​களும் நியூஸிலாந்​தில் உள்​ளன. இது​போல எத்​தனையோ பெயர்​கள் நியூஸிலாந்​தில் இடம்​பெற்​றுள்​ளன. இந்​தி​யா, நியூஸிலாந்து இடையே விளை​யாட்டு துறை​யில் உறவு ஏற்​பட்டு 100 ஆண்​டு​கள் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்​டில், இந்​திய ஹாக்கி அணி, நியூஸிலாந்து வந்து விளை​யாடி உள்​ளது. அப்​போது மேஜர் தயான் சந்​தின் திறமை பேசப்​பட்​டது.

நியூஸிலாந்​திடம் இருந்து ரக்பி கற்​றுக் கொள்ள இந்​தியா விரும்​பு​கிறது. சமீபத்​தில் இந்​திய ரக்பி மற்​றும் நியூஸிலாந்​தின் ரக்பி அணி​யும் இணைந்து ஒடி​சா​வில் இணைந்து பயற்சி மேற்​கொண்​டது சிறந்த தொடக்​கம். விளை​யாட்டு துறை​யில் இரு நாடு​களும் இணைந்து பெரிய சாதனை படைக்க முடி​யும் என்று நம்​பு​கிறேன்.

இந்​தி​யா​வின் சந்​திர​யான் விண்​கலம் நில​வின் தென் பகு​தி​யில் தரை​யிறங்​கிய போது, நியூஸிலாந்து மக்​கள் கொண்​டாடினர். இந்த வெற்​றி​யில் நியூஸிலாந்​தின் தொழில்​நுட்​பம் பங்​களித்​தது. இந்த ஒத்​துழைப்பை வரும் ஆண்​டு​களில் இன்​னும் எடுத்து செல்ல விரும்​பு​கிறோம்.

இன்று உலகில் மிக வேக​மாக வளரும் பொருளா​தா​ர​மாக இந்​தியா திகழ்​கிறது. அதி​களவு தடுப்​பூசி உற்​பத்தி, மொபைல் போன் உற்​பத்தி, அதி​களவு கோதுமை உற்​பத்தி, பால் உற்​பத்​தி, ஆட்​டோமொபைல், போன்ற பல துறைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இன்​றைய இந்​தியா உலகுக்​குப் புதிய வளர்ச்சி மாதிரி​களை​யும் வழங்கி வரு​கிறது. உலகம் முழு​வதும் உள்ள பல நாடு​கள் இன்று இந்​தி​யா​வின் டிஜிட்​டல் உள்​கட்​டமைப்​புத் துறை​யில் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன. இந்​தியா - நியூஸிலாந்து நாடு​களுக்கு முன்​னால் வாய்ப்​பு​கள் நிறைந்த பெருங்​கடல் உள்​ளது. அதற்கு சாதக​மான காற்று வீசுகிறது. இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

பிரதமர் நரேந்​திர மோடி - நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்​டோபர் லக்​சன் முன்​னிலை​யில் இரு நாடு​கள் இடையே பாது​காப்​பு, கால்​நடை பராமரிப்பு மற்​றும் பால்​வளம், விளை​யாட்​டு, பேரிடர் மேலாண்​மை, சுற்​றுலா ஆகிய 5 துறை​களில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன.

SCROLL FOR NEXT