ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று நடை பெற்ற கூட்டத்தில் ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ்.படம்: பிடிஐ

 
உலகம்

“வளர்ந்த நாடாக இந்தியா மாற உழைக்கிறோம்” - ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

மெல்போர்ன்: அதிகம் வளருவோம், அதிகம் சாதிப்போம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் மிக விரைவாக வளர்ந்த வல்லரசு நாடாக இந்தியா மாறுவதற்கு உழைத்து வருகிறோம் என இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்​தோ​னேசி​யா, ஆஸ்​திரேலி​யா, நியூசிலாந்து ஆகிய நாடு​களில் பிரதமர் மோடி அரசு​முறைப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இந்​தோ​னேசி​யப் பயணத்தை முடித்​துக்​கொண்டு அவர் 8-ம் தேதி ஆஸ்​திரேலியா வந்​தடைந்​தார். மெல்​போர்​னில் அந்​நாட்​டுப் பிரதமர் அந்​தோனி அல்​பனீஸ், கவர்​னர் ஜெனரல் சாம் மோஸ்​டின் உள்​ளிட்​டோரை சந்​தித்​துப் பேசி​னார்.

மெல்​போர்ன் நகரில் இந்​திய வம்​சாவளி​யினர் சார்​பில் ‘மெல்​போர்ன் மீட்ஸ் மோடி’ என்ற பிரம்​மாண்ட வரவேற்பு விழா​வில் பிரதமர் மோடி மற்​றும் ஆஸ்​திரேலியப் பிரதமர் அந்​தோனி அல்​பனீஸ் கலந்து கொண்​டனர். ஆயிரக்​கணக்​கான இந்​தி​யர்​கள் மத்​தி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: அதி​கம் வளரு​வோம், அதி​கம் சாதிப்​போம் என்ற தாரக மந்​திரத்​துடன், 21-ம் நூற்​றாண்​டில் மிக விரை​வாக வளர்ந்த வல்​லரசு நாடாக இந்​தியா மாறு​வதற்​கான இலக்கை நோக்கி உழைத்து வரு​கிறோம். இந்​தி​யா​வின் இந்த மாபெரும் கனவு​களுக்​கும், உயர்ந்த லட்​சி​யங்​களுக்​கும் நீங்​களே அஸ்திவாரம்.

இந்​தி​யர்​கள் எங்​கெல்​லாம் செல்​கிறார்​களோ, அங்​கெல்​லாம் பாலில் சர்க்​கரையைப் போன்று மாறுகிறார்​கள். பாலுக்கு சுவை சேர்க்​கும் சர்க்​கரையைப் போல இந்​திய வம்​சாவளி​யினர் இருக்​கின்​றனர். நாம் எங்கு சென்​றாலும் அன்​பு, நல்​லெண்​ணத்​தைப் பரப்​பு​கிறோம். உங்​கள் வீட்​டில் இருக்​கும் பால் ஆஸ்​திரேலி​யா​வுடைய​தாக இருக்​கலாம். ஆனால், தேநீர் இந்​தி​யா​வுடையது.

‘ஆபரேஷன் சிந்​தூர்’ நடவடிக்​கை​யின்​போது எதிரி​களின் தீவிர​வாத முகாம்​கள் தரைமட்​ட​மாக்​கப்​பட்​டன. தீவிர​வாதத்​துக்கு எதி​ராக இந்​தியா எடுத்த இந்த நடவடிக்​கைகள் உலகுக்கு ஒரு தெளி​வான செய்​தியை அனுப்​பி​யுள்​ளது. இந்​தி​யா​வின் பாது​காப்​புத் தளவாடங்​களின் திறன் மற்​றும் நம்​பகத்​தன்​மையை உலகம் இப்​போது நேரில் கண்டு வரு​கிறது.

ஆபரேஷன் சிந்​தூரின்​போது, தீவிர​வா​தி​களின் மறை​விடங்​கள் துல்​லிய​மாக தாக்​கப்​பட்​டன. இது உலகம் முழு​வதும் இருக்​கும் ஒவ்​வொரு இந்​தி​யருக்​கும் பெரு​மிதத்தை ஏற்​படுத்​தி​யிருக்​கும். இந்​தி​யா​வின் பாது​காப்​புத் திறன் மற்​றும் நிர்​வாகச் சீர்​திருத்​தங்​கள் இப்​போது உலகம் முழு​வதும் கவனம் பெற்று வரு​கின்​றன.இவ்​வாறு பிரதமர் பேசி​னார்.

இந்​திய - ஆஸ்​திரேலிய இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யின்​போது, ஆஸ்​திரேலிய பிரதமர் அந்​தோணி அல்​பனீஸ், ‘‘இந்​திய - ஆஸ்​திரேலிய நட்​புறவு, ஒன்​றும் ஒன்​றும் இரண்​டுக்கு சமம்’’ என்று குறிப்​பிட்​டார். அதை கேட்ட பிரதமர் மோடி, ‘‘ஒரு​வருக்கு ஆதர​வாக அரு​கில் மற்​றொரு​வர் நின்​றால், அவர்​கள் 2 பேராக மாட்​டார்​கள். அவர்​கள் பதினொன்​றாக மாறு​வார்​கள்’’ என்று இந்​தி​யில் பிரபல​மான மரபுத் தொடரைக் குறிப்​பிட்​டுப் பேசி​னார். அப்​போது இருதரப்​பிலும் சிரிப்​பலை எழுந்​தது.

பிரம்​மாண்ட முதலீடு: பிரதமரின் இந்த பயணத்​தில், புதிய ஒப்​பந்​தங்​கள் மூலம் இரு நாடுகள் இடையே வர்த்​தகம், பாது​காப்பு மற்​றும் கலாச்​சார உறவு​களை மேம்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. ஆஸ்​திரேலிய - இந்​திய முதன்​மைச் செயல் அதி​காரி​கள் மாநாட்​டில் உரை​யாற்​றிய பிரதமர் மோடி, இரு நாடு​களுக்கு இடையி​லான விரி​வான பொருளா​தார ஒத்​துழைப்பு ஒப்​பந்​தத்தை விரைந்து இறுதி செய்​யு​மாறு கேட்​டுக் கொண்​டார்.

இந்​தி​யா​வின் விமானப் போக்​கு​வரத்​து, நிதிச் சேவை​கள், அரிய கனிமங்​கள், நவீன தொழில்​நுட்​பம் மற்​றும் உணவுப் பதப்​படுத்​துதல் ஆகிய துறை​களில் உள்ள ஈடு இணை​யற்ற முதலீட்டு வாய்ப்​பு​களைப் பயன்​படுத்​திக் கொள்​ளு​மாறு ஆஸ்​திரேலிய நிறு​வனங்​களுக்கு அவர் அழைப்பு விடுத்​தார். இதன் ஒரு பகு​தி​யாக, ஆஸ்​திரேலி​யா​வின் மிகப்​பெரிய ஓய்​வூ​திய நிதி நிறு​வன​மான ‘ஆஸ்​திரேலியன் சூப்​பர்' இந்​தி​யா​வில் 500 மில்​லியன் ஆஸ்​திரேலிய டாலர்​களை முதலீடு செய்ய உள்​ள​தாக அறி​வித்​துள்​ளது. இது இந்​தி​யா​வின் பொருளா​தா​ரச் சீர்​திருத்​தங்​கள் மீது சர்​வ​தேச சமூகம் வைத்​துள்ள நம்​பிக்​கை​யைக் காட்​டு​கிறது என்று பிரதமர் மகிழ்ச்சி தெரி​வித்​தார்.

ஆஸ்​திரேலிய கவர்​னர் ஜெனரல் சாம் மோஸ்​டின் உடனான சந்​திப்​பின்​போது, இரு நாடு​களின் ஜனநாயக நெறி​முறை​கள் மற்​றும் மக்​கள் இடையி​லான உறவு​கள் குறித்து பிரதமர் மோடி விரி​வாக ஆலோ​சித்​தார். முன்​னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்​றும் விக்​டோரியா மாகாண கவர்​னர் மார்​கரெட் கார்ட்​னர் ஆகியோரை​யும் தனித்​தனியே சந்​தித்து கல்​வி,ஆராய்ச்சி மற்​றும் முதலீடு​கள் குறித்து பிரதமர் மோடி கலந்​தாலோ​சித்​தார்.இந்​தி​யா​வில் 2030-ம் ஆண்டு நடை​பெற உள்ள காமன்​வெல்த் போட்​டிகள் மற்​றும் 2032 ஆஸ்​திரேலிய ஒலிம்​பிக்​ போட்​டிகளில்​ இரு நாடு​களும்​ விளை​யாட்​டுத்​ துறை​யில்​ இணைந்​து செயல்​பட ஒப்​புக்​கொள்​ளப்​பட்​டது.

SCROLL FOR NEXT