உலகம்

குவைத் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்: கேள்விக்குறியாகும் சண்டை நிறுத்தம்

செய்திப்பிரிவு

துபாய்: அமெரிக்கா நடத்​திய தாக்​குதலுக்கு பதிலடி​யாக குவைத் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யிருப்பதால் சண்டை நிறுத்​தம் கேள்விக்​குறி​யாகி​யுள்​ளது.

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்​பு​கிறார். இதற்​காக ஈரானுடன் அமெரிக்க குழு பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டுள்​ளது. ஈரானில் உள்ள செறிவூட்​டப்​பட்ட யுரேனியம் ஒப்​படைக்​கப்பட வேண்​டும் என அதிபர் ட்ரம்ப் எதிர்​பார்க்​கிறார். ஈரான் மீதான பொருளா​தார தடைகள் நீக்​கப்​பட்​டு, முடக்​கப்​பட்ட சொத்​துக்​கள் விடுவிக்​கப்பட வேண்​டும் என ஈரான் விரும்​பு​கிறது. இதுகுறித்து பேச்​சு​வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க கடற்​படை கப்​பல்​களை குறி​வைத்து ஈரான் ஏவிய 4 ட்ரோன்​களை அமெரிக்கா நேற்று முன்​தினம் சுட்டு வீழத்​தி​யது. இதையடுத்து ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் 5-வது ட்ரோன் ஏவப்​படும் தரை கட்​டுப்​பாட்டு நிலை​யத்​தின் மீது அமெரிக்கா குண்டு வீசி​யது. இதே​போல் கடந்த திங்கட்கிழமையும் ஈரானின் ராணுவ இலக்​கு​களை குறி​வைத்து அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது.

ஹார்​முஸ் ஜல சந்​தி​யில் கண்ணி வெடிகளை போட்ட ஈரான் படகு​கள் மீதும் அமெரிக்க போர் விமானங்​கள் தாக்​குதல் நடத்தின. பாது​காப்பு நடவடிக்​கைக்​காக இந்த தாக்​குதலை நடத்தி​ய​தாக அமெரிக்கா கூறிவரு​கிறது. இதற்கு பதிலடி கொடுத்த​தாக ஈரான் ராணுவம் தெரி​வித்​துள்​ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்​தப்​பட்ட விமான தளங்​களை குறி​வைத்து தாக்குதல் நடத்​தினோம் என ஈரான் கூறியது. ஆனால் எந்த நாட்டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது என்​பதை தெரிவிக்கவில்லை.

இந்​நிலை​யில் குவைத் மீது ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக அந்​நாடு கூறி​யுள்​ளது. இரு தரப்பு இடையே சண்டை நிறுத்​தம் அமலில் உள்ள நிலை​யில் இந்த தாக்​குதல்​கள் நடை​பெற்று வரு​வது, போரை முடிவுக்​கு கொண்​டு வரும்​ முயற்சிக்​கு சவாலாக உள்​ளது.

SCROLL FOR NEXT