உலகம்

அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதர் சந்திப்பு - இரு தரப்பு உறவை வலுப்படுத்த ஆதரவு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ரஷ்​யா​விடம் இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், இந்​தி​யா​வின் இறக்​குமதி பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்​துள்ளார்.

இந்நிலை​யில், இந்​தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு ஒத்​துழைப்பை வலுப்​படுத்த அமெரிக்க செனட் உறுப்பினர்​கள் லிண்ட்சே கிரஹாம், ரிச்​சர்ட் ப்ளூமெந்தால், ஷெல்​டன் ஒயிட்​ஹவுஸ், பீட்​டர் வெல்ச், டான் சுலிவன் மற்​றும் மார்க்​வேனி முலின் ஆகியோரை இந்​திய தூதர் வினய் மோகன் கத்​ரா, ஏற்​கெனவே சந்தித்து பேசி​யுள்​ளார். அதன்​பின் அமெரிக்க நாடாளுமன்​றத்​தில் இந்​தியா - அமெரிக்கா இடையே​யான உறவை வலுப்​படுத்த நிலையான ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இதை வரவேற்ற இந்​திய தூதர் வினய் மோகன் கத்​ரா, எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்க எம்​.பி.க்​கள் 12 பேரை, இந்​தியா இல்​லத்​தில் சந்தித்​தது மகிழ்ச்​சி. வர்த்​தகம், நவீன தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்​பு, பாது​காப்​பு, தீவிர​வாத தடுப்பு முயற்சி ஆகிய​வற்​றில் இந்​தியா - அமெரிக்கா இடையே​யான உறவை வலுப்​படுத்​து​வதற்கு அமெரிக்க நாடாளுமன்​றத்​தில் இவர்​கள் தெரி​வித்த ஆதரவை வரவேற்​கிறேன்.

வரும் ஆண்​டு​களில் இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் 7 சதவீத வளர்ச்​சியை எட்​டும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இது இருதரப்பு உறவை மேலும் வலுப்​படுத்​தும்’’ என தெரிவித்​துள்​ளார். இந்​தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக இது​வரை 6 சுற்று பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்​றுள்​ளன. இந்​தியா மீது விதிக்​கப்​பட்ட 50 சதவீத வரியை நீக்​கு​வது தொடர்​பான பேச்​சு​வார்த்​தை​யும்​ இதில்​ அடங்​கும்​.

SCROLL FOR NEXT