உலகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பெய்லி பாலம், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை அனுப்பியது இந்தியா!

செய்திப்பிரிவு

கொழும்பு: வெள்ளத்​தால் பாதிக்​கப்​பட்ட இலங்​கை​யில், நிவாரண பணி​களை மேற்​கொள்ள பெய்லி பாலம், நீர் சுத்​தி​கரிப்பு இயந்​திரங்​களை விமானப்​படை சிறப்பு விமானம் மூலம் இந்​தியா அனுப்பி வைத்​தது.

டிட்வா புயல் காரண​மாக இலங்​கை​யில் ஏற்​பட்ட வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி 479 உயி​ரிழந்​தனர், 350 பேரை காண​வில்​லை. வீடு​களை இழந்த 1,88,000 பேர் 1,347 நிவாரன முகாம்​களில் தங்​கி​யுள்​ளனர். இலங்​கை​யின் நிவாரண பணி​களுக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும், ஆபரேஷன் சாகர் பந்து திட்​டத்​தின் கீழ் கடற்​படை கப்​பல்​கள் மற்​றும் விமானப்​படை சிறப்பு விமானங்​கள் மூலம் அளித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் வெள்​ளம் காரண​மாக இலங்​கை​யின் பல பகு​தி​களில் பாலங்​கள் இடிந்து துண்​டாகி​யுள்​ளன. இதனால் இங்கு நிவாரண பணி​களை மேற்​கொள்​வ​தில் சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. துண்​டிக்​கப்​பட்ட பகு​தி​களில் இந்​திய ராணுவத்​தில் பயன்​படுத்​தப்​படும் பெய்லி பாலங்​களை அனுப்ப வேண்​டும் எனவும், மக்​களுக்கு சுத்​த​மான

குடிநீர் கிடைக்​காத​தால் நீர் சுத்​தி​கரிப்பு இயந்​திரங்​களை வழங்க வேண்​டும் என இலங்கை சார்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

இதையடுத்து விமானப்​படை​யின் சி-17 குளோப் மாஸ்​டர் சரக்கு விமானத்​தில், பிற இடங்​களுக்கு எடுத்​துச் செல்​லப்​படும் பெய்லி பாலம், இதை அமைப்​ப​தற்​கான 22 பேர் அடங்கிய குழு, 500 நீர் சுத்​தி​கரிப்பு இயந்​திரங்​கள், மருத்​துவ குழு ஆகியவை இலங்​கைக்கு நேற்று முன்​தினம் அனுப்பி வைக்​கப்​பட்​ட​தாக இந்​திய தூதரகம் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இலங்கை அதிபர் அனுர குமர திச​நாயகே சமூக ஊடகத்​தில் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், "இலங்​கைக்கு இந்​தியா அளித்து வரும் வலு​வான ஆதர​வுக்​காக பிரதமர் நரேந்​திர மோடிக்கு நன்​றி" என தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT