இம்ரான் கான் சகோதரி அலீமா

 
உலகம்

“இந்தியாவுடன் போர் புரிய ஏங்குகிறார் பாகிஸ்தான் ராணுவ தளபதி” - இம்ரான் கான் சகோதரி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வுடன் போர் புரிய பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனிர் ஏங்​கு​வ​தாக முன்​னாள் பிரதமர் இம்​ரான் கான் சகோ​தரி அலீமா தெரி​வித்​துள்​ளார்.

பாகிஸ்​தான் தெஹ்ரீக்​-இ-இன்​சாப் (பிடிஐ) கட்​சி​யின் நிறு​வனரும், முன்​னாள் பிரதமரு​மான இம்​ரான் கான் மீது பல்​வேறு வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. அவர் 2 ஆண்​டுக்​கும் மேலாக ராவல்​பிண்​டி​யில் உள்ள அடி​யாலா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவரை சந்​திக்க குடும்​பத்​தினருக்கு அனு​மதி வழங்​கப்​பட​வில்​லை. இதனால் அவர் கொலை செய்​யப்​பட்​டிருக்​கலாம் என தகவல் வெளி​யானது.

இந்​நிலை​யில், இம்​ரான் கான் சகோ​தரி உஸ்மா கனும் நேற்று முன்​தினம் சிறை​யில் உள்ள தனது சகோ​தரரை நேரில் சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்​புக்​குப் பிறகு இம்​ரான் கான் நலமாக உள்​ளார் என செய்​தி​யாளர்​களிடம் உஸ்மா தெரிவித்​தார்.

இந்​நிலை​யில், இம்​ரான் கானின் மற்​றொரு சகோ​தரி அலீமா கனும் நேற்று தனி​யார் ஊடகத்​துக்கு பேட்டி அளித்​தார். அப்​போது கடந்த மே மாதம் இந்​தி​யா-​பாகிஸ்​தான் இடையே ஏற்​பட்ட போர் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறிய​தாவது: பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இந்​தி​யா​வுன் போர் புரிய ஏங்​கு​கிறார். அசிம் முனீர் மிகத் தீவிர​மாக இஸ்​லாமியப்​படுத்​தப் பட்ட​வரும் கடுமை​யான இஸ்​லாமிய அடிப்​படை​வா​தி​யும் ஆவார். இது​தான் அவர் இந்​தி​யா​வுடன் போர் புரிய விரும்​புவதற்​கான காரணம்.

அவருடைய இஸ்​லாமிய தீவிரத்​தன​மும் அடிப்​படை​வாத​மும், இஸ்​லாமை நம்​பாதவர்​களுக்கு எதி​ராக போராட அவரைத் தூண்டுகிறது. என்​னுடைய சகோ​தரர் இம்​ரான் கான் முழு தாராளவா​தி. அவர் ஆட்​சி​யில் இருந்​த​போது, இந்​தி​யா​வுட​னும் ஆளும் கட்​சி​யான பாஜக​வுட​னும் நட்​புடன் இருக்​கவே விரும்பினார் என்​பதை நீங்​கள் பார்த்​திருப்​பீர்​கள். ஆனால், அசீம் முனீர் இந்​தி​யா​வுடன் மோதல் போக்கை கடைபிடிக்​கிறார். இம்ரான் கான் ஒரு சொத்​து. அவரை சிறையி​லிருந்து விடுவிக்க மேற்​கத்​திய நாடு​கள் முயற்சி எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT