உலகம்

டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புது வியூகம்: நபருக்கு தலா ரூ.90 லட்சம் வழங்க முடிவு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஐரோப்​பிய நாடான டென்​மார்க்​கிடம் இருந்து கிரீன்​லாந்தை கைப்​பற்ற அமெரிக்கா புதிய வியூ​கத்தை வகுத்​துள்​ளது.

ஆர்​டிக் பகு​தி​யில் உலகின் மிகப்​பெரிய கிரீன்​லாந்து தீவு அமைந்​திருக்​கிறது. பிரான்​ஸ், ஜெர்​மனி, பிரிட்​டன், ஸ்பெ​யின், இத்​தாலி ஆகிய ஐரோப்​பிய நாடு​களின் பரப்​பளவுக்கு இணை​யாக கிரீன்​லாந்து பரந்து விரிந்​துள்​ளது.

கடந்த 1814-ம் ஆண்டு முதல் இந்த தீவு ஐரோப்​பிய நாடான டென்​மார்க்​கின் கட்​டுப்​பாட்​டின் கீழ் உள்​ளது. ஆர்​டிக் பகு​தி​யில் மிக நீண்​ட​கால​மாக ரஷ்யா ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. அண்​மை​கால​மாக சீனா​வும் ஆர்​டிக்​கில் கால் பதித்து தனது ஆதிக்​கத்தை நிலை​நாட்ட தீவிர முயற்சி செய்து வரு​கிறது. இந்த சூழலில் பாது​காப்பு காரணங்​களுக்​காக கிரீன்​லாந்து தீவு அமெரிக்கா​வுடன் இணைக்​கப்​படும் என்று அதிபர் ட்ரம்ப் அண்​மை​யில் தெரி​வித்​தார்.

இதுதொடர்பாக பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி, இத்​தாலி, போலந்​து, ஸ்பெ​யின், டென்​மார்க் ஆகிய நாடு​கள் ஒன்​றிணைந்து வெளி​யிட்ட அறிக்​கை​யில், “கிரீன்​லாந்​தில் வசிக்​கும் மக்​களுக்கே அந்த தீவு சொந்​தம். இதை வேறு யாரும் சொந்​தம் கொண்​டாட முடி​யாது. கிரீன்​லாந்​தின் எதிர்​காலத்தை டென்​மார்க், கிரீன்​லாந்து மட்​டுமே முடிவு செய்ய முடி​யும்” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

டென்​மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்​சன் கூறும்​போது, “கிரீன்​லாந்தை அமெரிக்கா கைப்​பற்ற முயன்​றால் நேட்டோ கூட்​டமைப்பு உடைந்து சிதறும். அமெரிக்​கா​வின் கோரிக்​கையை நாங்​கள் ஒரு​போதும் ஏற்க மாட்​டோம்” என்று தெரி​வித்​தார்.

தன்னாட்சி அதிகாரத்துடன் தனி நாடாளு​மன்​றத்​துடன் கிரீன்​லாந்து செயல்​பட்டு வரு​கிறது. பிரதம​ராக ஜென்ஸ் பிரடெரிக் நெல்​சன் பதவி வகிக்​கிறார். அவர் கூறும்​போது, “கிரீன்​லாந்து விற்​பனைக்கு அல்ல. எங்​கள் தீவை அமெரிக்கா சொந்​தம் கொண்​டாட முடி​யாது” என்று தெரி​வித்​தார்.

இந்த சூழலில் கிரீன்​லாந்தை கைப்​பற்ற அமெரிக்கா புதிய வியூ​கத்தை வகுத்​திருக்​கிறது. இதுதொடர்​பாக அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பாது​காப்பு காரணங்​களுக்​காக கிரீன்லாந்து தீவை அமெரிக்கா​வுடன் இணைக்க முடிவு செய்​திருக்​கிறோம். தற்​போது கிரீன்​லாந்து தீவில் சுமார் 57,000 பேர் வசிக்​கின்​றனர். அவர்​களுக்கு தலா ஒரு லட்​சம் டாலர் (ரூ.90 லட்​சம்) வழங்க முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. இதன்​மூலம் கிரீன்​லாந்து மக்​கள் அமெரிக்கா​வுக்கு ஆதரவு அளிப்​பார்​கள். எந்த வகையி​லா​வது கிரீன்​லாந்து தீவை விலை கொடுத்து வாங்​கு​வோம். இல்​லை​யென்​றால் ராஜ்ஜியரீ​தி​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி கிரீன்​லாந்தை அமெரிக்கா​வுடன் இணைப்​போம்.

இதுதொடர்​பாக அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ அடுத்த வாரம் டென்​மார்க் தலை​வர்​களை சந்​தித்​துப் பேசு​வார். கடந்த 1917-ம் ஆண்​டில் டென்​மார்க்​கிடம் இருந்து வெர்​ஜின் தீவு​களை விலைக்கு வாங்​கினோம். அதே​போன்று இப்​போது கிரீன்​லாந்தை வாங்​கு​வோம். தேவைப்​பட்​டால் ராணுவ நடவடிக்கை எடுக்​க​வும்​ தயங்​க மாட்​டோம்​. இவ்​வாறு அமெரிக்​க அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

சுட்டுத் தள்ளுவோம்: கடந்த 1952-ம் ஆண்டில் டென்மார்க் ராணுவத்தில் முக்கிய உத்தரவு அமல் செய்யப்பட்டது. இதன்படி டென்மார்க் எல்லைக்குள் அந்நியர்கள் ஊடுருவ முயற்சி செய்தால் ராணுவ வீரர்கள், "முதலில் அந்நியர்களை சுட்டுத் தள்ள வேண்டும். அதன்பிறகே கேள்விகளை எழுப்ப வேண்டும்’’. தற்போதைய சூழலில் இந்த நடைமுறையை டென்மார்க் ராணுவ வீரர்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று ராணுவ தலைமை உத்தரவிட்டு உள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவுக்கு டென்மார்க் அரசு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரீன்லாந்தின் தலைநகர் நூக் மற்றும் ஸ்டேசன் நோர்ட், டேன்போர்க், மெஸ்டர்ஸ்விக், க்ரோனெடல், கங்கர்லுசுவாக் ஆகிய இடங்களில் டென்மார்க் ராணுவ தளங்கள் அமைந்துள்ளன. இந்த ராணுவ தளங்களுக்கு கூடுதல் வீரர்கள், ஆயுதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

தீவின் முக்கியத்துவம்: இரண்டாம் உலகப்போரின்போது டென்மார்க் நாட்டையும் கிரீன்லாந்து தீவையும் ஜெர்மனியின் நாஜி படை ஆக்கிரமித்தது. அப்போது அமெரிக்க ராணுவ வீரர்கள், நாஜி படையை தோற்கடித்து டென்மார்க்கையும் கிரீன்லாந்து தீவையும் மீட்டனர். இதன்பிறகு கிரீன்லாந்தின் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள் செயல்பட்டன. பனிப்போர் காலத்துக்கு பிறகு அந்த ராணுவ தளங்கள் படிப்படியாக மூடப்பட்டன.

தற்போது கிரீன்லாந்தின் பிட்டஃபிக் என்ற இடத்தில் மட்டும் அமெரிக்க விண்வெளி கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. அங்கிருந்து செயற்கைக் கோள் கண்காணிப்பு, ஏவுகணை அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் பணிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இதற்காக சுமார் 150 அமெரிக்க வீரர்கள் கிரீன்லாந்து தீவில் தங்கி உள்ளனர்.

இரண்டாம் உலகப்போரின்போதே கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க முயற்சி செய்தது. அதற்கு டென்மார்க் சம்மதம் தெரிவிக்க வில்லை. தற்போது அதிபர் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக பறிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

SCROLL FOR NEXT