உலகம்

ஈரானில் போராடியதால் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

செய்திப்பிரிவு

துபாய்: ஈ​ரானில் கடந்த ஜனவரி மாதம் நடை​பெற்ற நாடு தழு​விய போராட்​டங்​களின்​போது கைது செய்​யப்​பட்ட 3 பேருக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

ஈரானில் கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதி​ராக திடீரென நாடு முழு​வதும் மிகப்​பெரிய அளவில் போராட்​டங்​கள் வெடித்​தன. இதில் பல்​லா​யிரக்​கணக்​கான மக்​கள் கலந்​து ​கொண்​டனர்.

          

நாட்டில் ஆடை கட்டுப்பாடு விதிப்பதாக பெண்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், சுதந்திரம் வேண்டும் என்று பல இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இதையடுத்து டெஹ்ரான் உட்பட பல நகரங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது. மேலும், ஈரான் அரசு கடுமை​யான வன்​முறையைப் பயன்​படுத்தி போராட்​டத்தை ஒடுக்​கியது. போராட்டக்காரர்கள் மீதுதாக்குதல் நடத்தியதில் ஆயிரக்​கணக்​கானோர் கொல்​லப்​பட்​டனர். பல்​லா​யிரக்​கணக்​கானோர் கைது செய்​யப்​பட்​டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்​களில் மெஹ்தி காசெமி, சலே முகமதி மற்​றும் சயீத் தவுதி ஆகிய மூவர் மீது, கோம் நகரில் 2 போலீஸ் அதி​காரி​களைக் கொலை செய்​த​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்​டது. கைது செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படும் என்று ஈரானிய நீதித்​துறை தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்து வந்​தது.

இந்​நிலை​யில். போலீஸ் அதி​காரி​களை கொலை செய்​த​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்ட அந்த மூன்று பேருக்​கும் தூக்​குத் தண்​டனை நிறைவேற்​றப்​பட்​ட​தாக மிசான் செய்தி நிறு​வனம் அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது.இதை தொடர்ந்​து, கைதாகி​யுள்ள மற்​றவர்​களுக்​கும் இதே​போல் தொடர்ச்​சி​யாக மரண தண்​டனை நிறைவேற்​றப்​படலாம் என மனித உரிமை ஆர்​வலர்​கள் அச்​சம்​ தெரி​வித்​துள்​ளனர்​. ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT