‘வாக்கர் எஸ்2’ ரோபோக்கள்.
சென்ஜென்: வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை ஈடுபடுத்த சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் சென்ஜென் மாகாணத்தில் உள்ளது யுபிடெக் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்.
இது தொழில்சாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு மனித ரேபோக்களை உருவாக்கி தருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்திடம் எல்லையில் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் ‘வாக்கர் எஸ்2’ என்ற மனித ரோபோக்களை தயாரித்து கொடுக்க 37 மில்லியன் டாலருக்கு சீன அரசு ஒப்பந்தம் செய்தது.
இதையடுத்து செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டில் இயங்கும் வகையிலான ரோபோக்களை யுபிடெக் இன்ஜினீயர்கள் உருவாக்கினர். இந்த ரோபோக்களை வியட்நாம் எல்லை அருகே குவாங்சி பகுதியில் உள்ள ஃபேங்செங்காங் என்ற கடலோர பகுதியில் ரோந்து பணியில் சீனா ஈடுபடுத்தவுள்ளது.
இந்த மனித ரோபோக்கள் பயணிகளை வரிசையாக நிற்கவைக்கவும், எளிமையான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும், வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், எல்லை பணியாளர்களுக்கு உதவியாகவும் செயல்படும்.
சரக்கு முனையத்தில் பணியாளர்களுக்கு உதவுவது, கன்டெய்னர்களின் ஐ.டி.க்களை சரிபார்ப்பது, சீல்களை உறுதி செய்து தவகல் அனுப்புவது போன்ற பணிகளில் இந்த மனித ரோபோக்கள் ஈடுபடுத்தப்படும். இவை நம்பகமான முறையில் செயலாற்றினால், இவை விமான நிலையம், துறைமுகம், ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.