உலகம்

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 2 இந்திய மாலுமிகள் மாயம்

செய்திப்பிரிவு

கீவ்: உக்​ரைனின் ஒடேசா துறை​முகத்​தில் நின்​றிருந்த சரக்கு கப்பல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலில் இந்திய மாலுமிகள் இரு​வரை தேடும் பணி நடை​பெறுகிறது.

ரஷ்​யா-உக்​ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கிய​தில் இருந்து இருதரப்​புக்கு இடையே அடிக்​கடி மோதல்​கள் நடை​பெறுகிறது. சில நாட்​களுக்கு முன், உக்​ரைனின் ஒடேசா துறை​முகத்​தில் ரஷ்யா நடத்​திய தாக்​குதலில் நான்கு இந்திய மாலுமிகள் உயி​ரிழந்​தனர். இதற்கு ரஷ்ய தூதரை நேரில் வர வழைத்து இந்​தியா தனது பலத்த எதிர்ப்பை தெரி​வித்தது.

ரஷ்யா - உக்​ரைன் இடையே தாக்​குதல் தொடர்​வ​தால், கருங்​கடல் பகு​தி​யில் உள்ள கப்​பல்​களில் பணிபுரி​யும் இந்​திய மாலுமிகள் மிகுந்த எச்​சரிக்​கை​யுடன் இருக்​கும்​படி இந்​தியா அறிவுறுத்தியிருந்​தது.

இந்​நிலை​யில் ஒடேசா துறை​முகத்​தில், ‘எம்வி ஏஜிஎன் ரகனர்’ என்ற கப்​பல் மீது நேற்று முன்​தினம் தாக்​குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கப்​பலில் இந்​திய மாலுமிகள் 4 பேர் பணி​யாற்​றுகின்​றனர். இவர்​களில் இரு​வரின் பாது​காப்பை உக்ரைனில் உள்ள இந்​தி​யத் தூதரகம் உறுதி செய்​துள்​ளது. மற்ற 2 மாலுமிகளைத் தேடும் பணி நடை​பெற்​று வருகிறது.

SCROLL FOR NEXT