உலகம்

ட்ரோன் தாக்குதல் புகைப்படத்தை பகிர்ந்ததாக பிரிட்டன் விமானப் பணிப்பெண் துபாயில் கைது

செய்திப்பிரிவு

துபாய்: அமெரிக்க படைத்​தளம் அமைந்​துள்ள வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்நிலையில், ஈரான் நடத்​திய ட்ரோன் தாக்​குதலில் ஐக்கிய அரபு அமீரகத்​தில் உள்ள துபாய் சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு அருகே உள்ள கட்​டிடம் சேதமடைந்துள்ளது.

இதை புகைப்​படம் எடுத்​துப் பகிர்ந்​த​தாக 25 வயதுடைய பிரிட்​டன் விமானப் பணிப்​பெண் துபா​யில் கைது செய்யப்பட்​டுள்​ளார். ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்​தி​யின்​படி, அந்​தப் பெண் ஒரு வாட்​ஸ்​அப் குழு​வில் அந்​தப் புகைப்​படத்​தைப் பகிர்ந்​து, விமான நிலை​யம் வழி​யாகச் செல்​வது பாது​காப்​பானதா என்று சக ஊழியர்​களிடம் கேட்​டுள்​ளார்.

          

இதனைத் தொடர்ந்​து, நாட்​டின் கடுமை​யான சைபர் கிரைம் சட்​டங்​களின் கீழ் அவர் மீது வழக்​குப் பதிவு செய்துள்​ளனர். அவர் மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டால், 2 ஆண்​டு​கள் வரை சிறைத்​தண்​டனை மற்​றும் 54,000 டாலர் அபராதம் விதிக்​கப்​படலாம்.

அதனைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படு​வார். இதற்கிடையில், பாது​காப்பு தொடர்​பான முக்​கிய​மான காட்​சிகளைப் படம்​பிடிக்கவோ அல்​லது பகிரவோ வேண்​டாம் என்று பிரிட்​டன் மற்​றும் இந்​தி​யத் தூதரகங்​கள் தங்​களது நாட்​டு குடிமக்களுக்​கு அறி​வுறுத்​தி உள்​ளன.

SCROLL FOR NEXT