டாக்கா: வங்கதேசத்தில் ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அதிபர் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 78 வயதான மூத்த அரசியல்வாதியான ஆலம்கீர், அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பிஎன்பி பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உயர்மட்ட கொள்கை முடிவெடுக்கும் நிலைக் குழுவிலிருந்தும் விலகினார் என்று அக்கட்சியின் மூத்த இணைப் பொதுச் செயலாளர் ருஹுல் கபீர் ரிஸ்வி தெரிவித்தார்.