உலகம்

ஐஎஸ் கருவூலம் மீது அமெரிக்கா தாக்குதல்: ரூ.3440 கோடி பணம், 20 கிலோ தங்கம் அழிப்பு

பிடிஐ

இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் கருவூலத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 20 கிலோ தங்கம் மற்றும் 3440 கோடி பணம் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் நாச வேலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பண பலத்தை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க பாதுகாப்பு படைகள் தீவிரவமாக ஈடுபட்டுள்ளன.

இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் நிதி மையங்கள், கருவூலங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெரும் பணம் அழிக்கப்பட்டதால், தீவிரவாதிகளின் சம்பளத்தை ஐஎஸ் பாதியாக குறைத்துக் கொண்டது.

இந்நிலையில், வடக்கு இராக்கின் மொசூல் நகரில் நிறுவப்பட்டிருந்த ஐஎஸ் கருவூலம் மற்றும் சிரியாவில் அமைந்திருந்த முக்கிய கருவூலத்தின் மீது சமீபத்தில் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 கிலோ தங்கம் மற்றும் 3440 கோடி பணம் அழிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் மேலும் கூடுதலான பணம் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் குறைவாக அவை மதிப்பீடப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT