உலகம்

நரேந்திர மோடி வருகையை பாகிஸ்தான் மக்கள் வரவேற்றனர்: வெளியுறவு ஆலோசகர் தகவல்

பிடிஐ

பிரதமர் மோடியின் வருகையை பாகிஸ்தான் மக்கள் வரவேற்றதாக அந்நாட்டு வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வருகை குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ், நேற்று முன்தினம் கொள்கை அறிக்கை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: இரு நாடுகளின் வெளியுறவுத் துறை செயலாளர்கள் வரும் ஜனவரி 14-15-ல் சந்திப்பர். அப் போது, அடுத்த ஆறு மாதங்களில் 10 விவகாரங்கள் குறித்து பேசு வதற்கான வரைவை தயாரிப்பர்.

கடினமான முடிவுகள், முக்கிய விவகாரங்கள் காரணமாத பேச்சுவார்த்தை சவால் மிக்கதாக இருக்கும். பேச்சுவார்த்தை தொடர் பாக நிதர்சனத்தை மீறிய எதிர் பார்ப்புகள் குறித்து எச்சரிக்கை அவசியம். சில பிரச்சினைகள் குறித்து விரைவிலும், எஞ்சிய விவகாரங்கள் படிப்படியாகவும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும்.

மோடியின் பாகிஸ்தான் வருகை நல்லெண்ண வருகை யாகும். இதனை பாகிஸ்தானில் உள்ள பெரும்பான்மை மக்களும், இந்தியர்களும், சர்வதேச சமூகத் தினரும் வரவேற்றுள்ளனர்.

இரு தலைவர்களும் 5 முறை சந்தித்துள்ளனர். லாகூர் சந்திப் பால் நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. இது வரும் பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு ஆசிஷ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT