துருக்கி கடல் எல்லையில் படகு மூழ்கியதில் 9 அகதிகள் உயிரிழந் தனர். 11 பேரைக் காணவில்லை. 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். அவர்கள் கடல்மார்க்கமாக துருக்கி, கிரீஸ் தீவுகளில் கரையேறுகின்றனர்.
துருக்கியின் பாடம்லி கடற்கரை பகுதியில் நேற்றுமுன்தினம் ஒரு மரப்படகு பாரம் தாங்காமல் கடலில் மூழ்கியது. துருக்கி கடலோரக் காவல் படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 9 அகதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 11 பேரைக் காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த 20-ம் தேதி இதே பகுதியில் ஒரு படகு மூழ்கி 18 அகதிகள் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந் திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.