உலகம்

சொந்த நாட்டிற்கு கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரியுங்கள்: ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

சொந்த நாட்டிற்கு முதலில் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரியுங்கள் என்று ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “டிசம்பர் மாதம் முடிவதற்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிப்போம். டிசம்பர் மாதத் தொடக்கத்தில் 20 லட்சம் கரோன தடுப்பு மருந்துகளை . கடந்த வாரம்தான் அர்ஜென்டினாவுக்கு 3 லட்சம் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பினோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சொந்த நாட்டிற்கு முதலில் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரியுங்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின்.

ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.

SCROLL FOR NEXT