உலகம்

அயர்லாந்தில் கரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

அயர்லாந்தில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து அயர்லாந்து அரசு தரப்பி, “ நாம் இரண்டு வாரங்களுக்கு கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க உள்ளோம். தொடர்ந்து சில நாட்களாக கரோனா அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடக்கு அயர்லாந்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

உலகம் முழுவதும் 3.8 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT