உலகம்

இந்திய நிலைகளை நோக்கி மற்றொரு தாக்குதலை சீன அதிபர் திட்டமிடுகிறார் : அமெரிக்கப் பத்திரிக்கை எச்சரிக்கை 

செய்திப்பிரிவு

கிழக்கு லடாக் பகுதியில் பதற்றத்துக்குக் காரணம் சீன அதிபர் ஜின்பிங் தான். இந்திய எல்லையில் இன்னொரு தாக்குதலுக்கு அவர் உத்தரவிடுவார் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூஸ் வீக்கில் வெளியிடப்பட்ட கட்டுரையில், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான சீன அதிபர் ஜின்பிங் லடாக்கில் உள்ள இந்திய நிலைகளுக்கு எதிராக "மற்றொரு பயங்கரத் தாக்குதலை தொடங்க சீன ராணுவத்திற்கு உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக ஜின்பிங்கைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவுக்குள் செயல்படுத்த நினைத்த ஆக்கிரமிப்பு நகர்வுகள் மற்றும் அவரது இராணுவம் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்துள்ளது. இந்திய எல்லையில் சீன இராணுவத்தின் பின்னடைவுகள் விளைவுகளை ஏற்படுத்தும்.

சீன ராணூவத்தின் பின்னடைவு, கட்சியில் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவரான ஜின்பிங்குக்கு ராணுவத்தில் தனது விசுவாசிகளை நியமிக்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது. சீன இராணுவம் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பின்வாங்குவதாகவும், சீன அதிபரை இந்தியப் படைகள் மீது மற்றொரு தாக்குதலைத் தொடங்க தூண்டுவதாகவும் அந்த கட்டுரை எச்சரித்து உள்ளது.

SCROLL FOR NEXT