உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: பொதுமக்கள் பலி

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் குண்டாஸ் மாகாணத்தில் தலிபான்கள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 பெண்கள், 2 குழந்தைகள் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் அங்கு போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக் கொண்டனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐஎஸ் தீவிரவாதிகளும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.

SCROLL FOR NEXT