பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 49,298 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் 49,298 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,56,652 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலில் கரோனாவுக்கு 1.11,100 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் மக்கள் தொகை அதிகமுள்ள இடமான ஸா பாலோவில் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவின் மூத்த அதிகாரி சவுசா பிராகா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த வாரம் சா பாலோ ஆளு நர் டோரியா கடந்த வாரம் கரோனாவால் பாதிக்கப்பட்டார்.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.
கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.