உலகம்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 59,961 பேர் கரோனாவால் பாதிப்பு

செய்திப்பிரிவு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 59,961 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1311 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து பிரேசிலின் சுகாதாரத் துறை த்ரப்பில், “ பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் 59,961 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,311 பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் இதுவரை மொத்தமாக 22, 87,475 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 84,082 பேர் பலியாகி உள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கரோனா பரவலின் மையமாக பிரேசில் விளங்குவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லத்தின் அமெரிக்க நாடுகளில் பிரேசில்லுக்கு அடுத்து பெரு நாட்டில் மக்கள் கரோனாவினால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பெரு நாட்டில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,654 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

SCROLL FOR NEXT