ட்விட்டர் பட உதவி 
உலகம்

நேபாளத்தில் வெள்ளம்: 12 பேர் பலி; 19 பேர் மாயம்

செய்திப்பிரிவு

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 12 பேர் பலியாகி உள்ளனர். 19 பேர் மாயமாகி உள்ளனர்.

இதுகுறித்து நேபாள ஊடகங்கள் தரப்பில், “ நேபாளத்தில் வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போக்ரா நகரில் சாரங்கோட், ஹெம்ஜன் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 12 பேர் பலியாகினர். 19 பேர் மாயமாகி உள்ளனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக பல வீடுகள் சரிந்துள்ளன”என்று செய்தி வெளியிட்டுள்ளன.

நிலச்சரிவு காரணமாக நேபாளத்தின் மேற்கு பகுதியில் சாலை போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும் கடந்த இரண்டு நாட்களாக பெய்யும் கனமழை காரணமாக நாட்டின் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு நேபாளத்தில் கனமழை தொடரும் என்று நேபாள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் கரோனா

நேபாளத்தில் இதுவரை 16,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் உள்ள 77 மாவட்டங்களில் இரு மாவட்டங்களைத் தவிர்த்து 75 மாவட்டங்களில் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT