உலகம்

ஈரானில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று: ஒரே நாளில் 2,813 பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,813 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,813 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் இரண்டாம் தேதிக்கு பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும். இதனைத் தொடர்ந்து ஈரானில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,46,668 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் சுமார் 7,677 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அசர்பாய்ஜன், லோரிஸ்டன், பலுசிஸ்தான், சிஸ்டன் போன்ற பகுதிகள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று அதிகமானதைத் தொடர்ந்து ஈரானின் கிழக்குப் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.

ஈரானில் கரோனா பரவலாக இருக்கும் நிலையில் வழிபாட்டு தளங்களை திறக்க அந்நாட்டு அரசு சில தினங்களுக்கு முன்னர்தான் உத்தரவிட்டது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா தொற்றால் ஈரான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரானில் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய கரோனா மார்ச் மாதம் தீவிரத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT